வட்டியை அள்ளித்தரும் SBI வங்கியின் சூப்பர் முதலீட்டு திட்டம்.. மக்களே அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!!

SBI Bank investment scheme

அரசுத்துறை ஊழியர்களும், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் நபர்களும், தங்கள் ஓய்வுக்காலம் நிதிநிலை பாதிக்காமல் இருக்கவேண்டும் என்பதற்காக, பல்வேறு ஓய்வூதிய சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர். அந்தவகையில், எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் 2022 பிப்ரவரியில் அறிமுகப்படுத்திய ‘ரிட்டையர்மெண்ட் பெனிபிட் பண்ட்’, தற்போது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


இந்த திட்டம் பங்குசந்தை தொடர்பானதால் ஓரளவு அபாயம் இருந்தாலும், நீண்ட காலம் தொடர்ந்து முதலீடு செய்தால் ஓய்வுக்குப் பிறகு நிதியாக நம்பிக்கையுடன் சார்ந்துக்கொள்ளக்கூடிய திட்டமாக இது இருக்கிறது. சந்தை உயர்வு-இறக்கங்களில் பாதிப்பு இருந்தாலும், இது நீண்டகாலத்தில் நல்ல வருமானம் தரக்கூடிய ஓய்வூதியத் திட்டமாக இருக்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த திட்டமானது மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தால் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. தற்போது ஒரு ஆண்டு முடிவில், இதன் மொத்த சொத்தானது 778.69 கோடி மதிப்பாக உள்ளது. அதற்கு சில காரணம் இருக்கின்றன. அதாவது சற்று அதிக சந்தை அபாயங்கள் உடைய திட்டமாக இது இருந்தாலும் இதில் நீண்ட காலமாக முதலீடு செய்தால் நல்ல பென்ஷன் கிடைக்கும்.

அதுமட்டுமின்றி இந்த திட்டத்தில் குறைந்தபட்ச முதலீடு 500 ஆகும். அதே போல இந்த பண்டிற்கான லாகின் காலம் 5 ஆண்டுகள் ஆகும். மேலும், இது ஒரு ஆண்டுக்கு சராசரியாக 22.44 சதவீதம் வருட வருமானத்தை கொடுக்கும். மேலும், இதில் வெளியேறும் கட்டணம் எதுவும் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாருக்கு ஏற்றது? இந்த திட்டம், ஓய்வுக்கால நிதி பாதுகாப்பை விரும்பும் 30–50 வயதுக்குட்பட்டோர் முதலீடு செய்ய ஏற்றது. குறிப்பாக, தொடர்ச்சியாக 10–15 ஆண்டுகள் முதலீடு செய்ய திட்டமிடுபவர்கள், இந்த திட்டத்தின் முழு பலனை அனுபவிக்க முடியும்.

குறிப்பு: மியூச்சுவல் ஃபண்டுகளில் சந்தை அபாயங்கள் எப்போதும் இருக்கும். எனவே முதலீடு செய்வதற்கு முன் நிதி ஆலோசகரின் கருத்தை பெறுவது நல்லது.

Read more: முதலில் உடலுறவு.. பிறகு திருமணம்.. வினோத வழக்கம் கொண்ட பழங்குடி கிராமம்..!! இந்தியாவில் எங்க இருக்கு தெரியுமா..?

Next Post

போர் விமானங்களை ஓட்டும் விமானியின் உடையில் இவ்வளவு விஷயம் இருக்கா..? - பலருக்கு தெரியாத தகவல்

Sun Jun 1 , 2025
போர் விமானங்களை போல அதனை ஓட்டும் விமானிகளின் உடையும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம். நவீன காலத்தில் எந்தவொரு போரிலும் எந்தவொரு நாட்டிற்கும் முதுகெலும்பாக போர் விமானங்கள் செயல்படுகின்றன. இவற்றைக் கொண்டு, எந்த எதிரிப் பகுதியையும் சில நொடிகளில் அழிக்க முடியும். உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களைப் பயன்படுத்துகின்றன, மேலும் ஆறாவது மற்றும் ஏழாம் தலைமுறை போர் விமானங்களை உருவாக்கும் […]
air force 1

You May Like