தண்ணீர் பட்டு பாத்ரூம் கதவுகள் சேதமடைகிறதா?. இதை மட்டும் ஒருமுறை ட்ரை பண்ணுங்க போதும்!

bathroom door dirty

பொதுவாக நாம் வாழும் இடத்தை அல்லது வீட்டை சுத்தமாக பராமரித்தால் மட்டுமே நமது உடல் நலத்திற்கு எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. அதனால் நாம் வாழும் இடத்தை எப்பொழுதும் சுத்தமாக பராமரிப்பது நமது முக்கியமான கடமையாகும். அதிலும் குறிப்பாக நாம் பயன்படுத்தும் குளியலறை மற்றும் கழிவறையை மிக மிக கவனத்துடன் சுத்தமாக பராமரிக்க வேண்டும். ஆனால் நம்மில் பலருக்கும் அவற்றை சுத்தமாக பாராமரிப்பது என்பது மிகவும் கடினமான ஒரு செயலாகவே உள்ளது.


பெரும்பாலானோர் வீடுகளில் பாத்ரூம் கதவுகள்தான் முதலில் சேதாரமடையும். அதுவும் கீழிருந்து பழுதடைய ஆரம்பித்து மொத்தமாக உடையத் தொடங்கும். இதனாலேயே பலரது வீட்டின் பாத்ரூம் கதவுகள் உடைந்த அரை கதவுகளாகவே இருக்கும். இப்படி நடப்பதற்கு காரணம் தண்ணீர்தான். குளியலறை கதவுகள் தண்ணீரில் ஊறி உடைய ஆரம்பிக்கிறது. இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தால் உங்களுக்கான கட்டுரைதான் இது.

குளியலறையின் கதவுகள் தண்ணீரால் ஊறும் தன்மைக் கொண்டது என்பதால் அவற்றை பாதுகாக்க பிளாஸ்டிக் பெயிண்ட் பயன்படுத்தலாம். இவை சந்தையில் எளிதாகக் கிடைக்கின்றன மற்றும் பல வண்ணங்களில் கிடைக்கின்றன. இரண்டு அல்லது மூன்று அடுக்குகளாக கதவுகளில் இந்த பெயிட்டை அடிக்க , கதவுகள் தண்ணீரில் ஊறாமல் பாதுகாக்கப்படும். அதோடு சேதமடையாது.

கதவுகள் நடுவில் உடைந்திருந்தாலோ அல்லது அவற்றில் துளைகள் இருந்தாலோ, அவற்றை சுண்ணக்கட்டி அல்லது MCL கொண்டு மூடிவிடுங்கள். அவை மிகவும் ஆழமாக இருந்தால், மரம் மிக எளிதாக உடைந்து விடும். அதனால்தான் இந்த இடைவெளிகளை சுண்ணாம்பு கொண்டு மூடுவது நல்லது.

கதவுகளில் நீர் ஒட்டாமல் இருக்க எண்ணெயைப் பயன்படுத்தலாம். இதற்கு, க்ரீஸ் ஆயில் அல்லது எந்த வகையான அடர்த்தியான எண்ணெயையும் கதவுகளில் நன்கு தடவவும். ஒவ்வொரு 6 முதல் 12 மாதங்கள் இடைவெளியில் குளியலறையின் கதவுகளை நன்கு வார்னிஷ் செய்ய வேண்டும். இதைச் செய்வதன் மூலம், கதவின் வலிமை பராமரிக்கப்படும், மேலும் தண்ணீரின் தாக்கத்திலிருந்தும் காப்பாற்றப்படும்.

கதவுகள் தண்ணீரால் சேதமடையாமல் இருக்க பலர் உட்புறம் டின் ஷீட்டைப் பொருத்துகிறார்கள். இப்படிச் செய்வதன் மூலம் தண்ணீர் வாசலில் நிற்காமல், தண்ணீர் முழுவதும் கீழே பாயும்.அலுமினியம் அல்லது பிளாஸ்டிக் கதவு : உங்கள் கதவு மீண்டும் மீண்டும் சேதமடைந்தால், மரத்திற்கு பதிலாக பிளாஸ்டிக் அல்லது அலுமினிய கதவுகளை பொறுத்துவதே எளிதான வழி.

Readmore: அதென்ன சைலண்ட் ஹார்ட் அட்டாக்..? இந்த அறிகுறி இருந்தால் உடனே மருத்துவர் கிட்ட போங்க..!!

KOKILA

Next Post

இன்று பள்ளிகள் திறப்பு... பேருந்துகளை இயக்குவதற்கான நடைமுறை...! போக்குவரத்து துறை உத்தரவு...!

Mon Jun 2 , 2025
கோடை விடுமுறை முடிந்து, இன்று பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, “பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் பேருந்தில் பயணம் செய்தால் பேருந்தை சாலையின் ஓரம் நிறுத்தி மாணவர்களை பேருந்தின் உள்ளே வரவழைத்த பின் பேருந்தை இயக்க வேண்டும்” என ஓட்டுநர், நடத்துநர்களுக்கு போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது. கோடை விடுமுறை முடிந்து அனைத்து விதமான பள்ளிகளும் இன்று முதல் திறக்கப்பட உள்ளன. இதற்கான முன்னேற்பாடுகள் முடிக்கப்பட்டு திறப்புக்காக பள்ளிகள் தயார் நிலையில் உள்ளன. முதல் […]
school 2025

You May Like