ஜூன் 2 ஆம் தேதியான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்தது.
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் – டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. சர்வதேச பங்குச் சந்தைகளில் கலவையான போக்கு நிலவுகிறது. இதனால், பாதுகாப்பு கருதி தங்கத்தின் முதலீடு செய்வது அதிகரிப்பதால், ஆபரணத் தங்கம் விலையிலும் சற்றே உயர்வு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பால், உலகம் முழுவதும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் உருவாகி தங்கம் விலை மேலும் உயர்ந்தது. இதையடுத்தும் இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றமும் தங்கம் விலையில் எதிரொலித்தது. தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்து காணப்படுகிறது.
சென்னையில் தங்கத்தின் விலை ஜூன் 1 ஆம் தேதியான நேற்று, ஞாயிற்றுக்கிழமை என்பதால் எந்த மாற்றமில்லாமல் ஒரு சவரன் ரூ 71,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று மார்க்கெட் திறந்தது விலை எப்படியிருக்குமோ என்ற அச்சம் எழுந்த நிலையில், ஜூன் 2 ஆம் தேதியான இன்று தங்கம் விலை மேலும் உயர்ந்தது.
அதன்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,950க்கும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.71,600க்கும் விற்பனை செய்யபடுகிறது. வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிலோ ரூ.1,11,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மாத தொடக்கத்திலே தங்கம் விலை உயர்ந்தது நகைப்பிரியர்களை கலக்கமடைய செய்துள்ளது.
கடைசி ஏழு நாள் தங்கம் விலை நிலவரம்:-
31-05-2025 – ஒரு பவுன் (22 காரட்) ரூ. 71,360
30-05-2025 – ஒரு பவுன் (22 காரட்) ரூ. 71,360
29-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,480
28-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,480
27-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,960
26-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,600
25-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,920
Read more: எதிரி ட்ரோன்களை நொடியில் அழிக்கும் லேசர் ஆயுதம்.. போரில் பயன்படுத்திய முதல் நாடு இஸ்ரேல்..!!