fbpx

மணிப்பூரில் மீண்டும் வெடித்த கலவரம்..!! 3 பேர் சுட்டுக் கொலை..!! ஊரடங்கு தளர்வு வாபஸ்..!! போலீஸ் குவிப்பு..!!

மணிப்பூர் மாநிலத்தில் நேற்றிரவு (வெள்ளிக்கிழமை) மீண்டும் புதிதாக வெடித்தக் கலவரத்தில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்கள் 3 வரும் மைத்தேயி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக குகி சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. க்வாக்டா பகுதியில் தான் இந்தக் கலவரம் நடந்துள்ளது. இந்த கலவரம் காரணமாக ஊரடங்கு தளர்த்தப்பட்ட பல்வேறு பகுதிகளிலும் அது வாபஸ் பெறப்பட்டுள்ளது. குறிப்பாக இம்பால் கிழக்கு மற்றும் இம்பால் மேற்கு பகுதிகளில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு திரும்பப் பெறப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிஷ்ணுபூர் காவல்துறை கூறுகையில், ”மத்தியப் படைகளின் பாதுகாப்பு வளையத்தில் இருந்த பாதுகாப்புப் பகுதியில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் குவாக்டா பகுதிக்குள் கலவரக்காரர்கள் நுழைந்தனர். பாதுகாக்கப்பட்ட பகுதியைத் தாண்டி வந்த சிலர் மைத்தேயி மக்கள் வசிக்கும் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால், மீண்டும் கலவரம் வெடித்தது. இதில் மைத்தேயி சமூகத்தைச் சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டனர். குகி சமூகத்தினர் வீடுகள் பல எரிக்கப்பட்டுள்ளன. சம்பவ பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை ஆயுதப் படைகளுக்கும் மைத்தேயி சமூகத்தினருக்கும் இடையே நடந்த மோதலில் 17 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், நேற்று வெடித்தக் கலவரத்தில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதுதவிர கங்வாய், போக்சாவ் பகுதிகளில் ஏற்பட்ட கலவரங்களை அடக்கப் போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். மைத்தேயி சமூகப் பெண்கள் சோதனைச் சாவடியைத் தாண்டிய நுழைய முயன்றதால் பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகை குண்டுக்ளை வீசி தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது.

Chella

Next Post

தமிழ்நாட்டில் இன்றைக்கும் சம்பவம் இருக்கு..!! மக்களே பார்த்து வெளிய போங்க..!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

Sat Aug 5 , 2023
தமிழ்நாட்டில் இன்றும் வெப்பம் அதிகரிக்கும் என்றும், அதிக வெப்ப அழுத்தம் நிலவும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் வரும் 10ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் இன்று தமிழ்நாடு, புதுச்சேரி […]

You May Like