டெல்லி மாநிலம் ஹவுஸ் காஸில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் படிக்கும் 3 வயது சிறுமியை, ஒரு வாரமாக கழிவறைக்கு செல்லும்போதெல்லாம் பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றச்சாட்டின் பேரில் துப்புரவுத் தொழிலாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி மகளிர் ஆணையத்தின் ஆலோசகர் முன் செவ்வாய்க்கிழமை குழந்தை மற்றும் அவரது தாயின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. சிறுமியின் கூற்றுப்படி, அவர் கழிவறைக்கு செல்லும்போதெல்லாம், அந்த துப்புரவு பணியாளர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமியின் புகாரை அடுத்து அர்ஜுன் குமாரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையின் தந்தை மத்திய அமைச்சகத்தில் பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.