பல பெண்களுடன் கணவர் உடலுறவு..!! செல்போனில் கொட்டிக் கிடக்கும் ஆபாச வீடியோக்கள்..!! பாஜக பெண் தலைவரின் மருமகள் பரபரப்பு புகார்..!!

Gupta Manipur 2025

மணிப்பூர் மாநிலத்தில் தற்போது ஜனாதிபதி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால், இங்கு மீண்டும் ஆட்சி அமைக்க பாஜக முயற்சித்து வருகிறது. தற்போதைக்கு தனக்கு 44 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக ஆளுநா் அஜய்குமாா் பல்லாவை சந்தித்து பாஜக எம்எல்ஏ தோக்சோம் ராதேஷாம் சிங் கூறியுள்ளார். இந்த சூழலில் தான், மணிப்பூரில் மீண்டும் ஒரு பூகம்பம் வெடித்துள்ளது.


அதாவது, பாரதிய ஜனதா கட்சியின் பெண் தலைவரின் மகனின் 130 ஆபாச வீடியோக்கள் தொடர்பான வழக்கு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதாவது, மகிளா மோர்ச்சா நகர தலைவராக இருப்பவர் சீமா குப்தா. இவரது மகன் சுபம் குப்தா ஏராளமான பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோக்கள் தான், தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுபம் குப்தாவின் மனைவி ஷீத்தல் அளித்த புகாரின் பேரில் தான், இச்சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவர் அளித்த புகாரில், “தன்னுடைய கணவர் சுபம் குப்தா, பல பெண்களுடன் உடலுறவு வைத்திருக்கிறார். உடலுறவு கொள்ளும்போது அதனை வீடியோவாக பதிவு செய்திருக்கிறார். என்னையும், அவர் உடல் ரீதியாக கொடுமைப்படுத்தியிருக்கிறார். என்னை வலுக்கட்டாயப்படுத்தி ஆபாச படங்களை பார்க்க வைப்பார். தற்போது அவரிடம் 130-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் உள்ளது.

மேலும், இதுகுறித்து அவரிடம் கேட்டால், தன்னுடைய அம்மா, ஒரு பாஜக தலைவர் என்றும் உங்களால் என்னை எதுவும் செய்ய முடியாது என்றும் மிரட்டுகிறார். தனது பெரிய பெரிய தலைவர்களுடன் பழக்கம் இருப்பதால், நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். என்னை யாரும் கேள்வி கேட்க முடியாது என்று திமிறாக பேசுகிறார். மேலும், என்னை வீட்டில் அடைத்து வைத்து பட்டினி போட்டார். வரதட்சணை கேட்டு கொடுமை செய்தார்” என்று தன்னுடைய புகாரில் தெரிவித்துள்ளார். மனைவி ஷீத்தல் அளித்துள்ள புகாரின் பேரில் கணவர் சுபம் குப்தா, மாமியார் சீமா குப்தா உள்பட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஏற்கனவே, மணிப்பூர் அரசியலில் குழப்பமும், சலசலப்பும் நிலவி வருகிறது. இந்நிலையில், பாஜக பெண் தலைவரின் மகன் சுபம் குப்தா மீது அவரது மனைவியே, பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இதற்கு ஆதாரமாக ஆபாச வீடியோக்கள் இருக்கின்றன. அதேசமயம், அந்த வீடியோக்களின் உண்மைத் தன்மையை அறிய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Read More : சென்னையில் கொரோனாவால் மேலும் ஒரு இளைஞர் உயிரிழப்பு..? மீண்டும் அமலுக்கு வருகிறதா இரவு நேர ஊரடங்கு..? பீதியில் மக்கள்..!!

CHELLA

Next Post

இன்ஸ்டாகிராம் பயனர்களே.. இதை செய்யாவிட்டால் உங்கள் ஃபோன் பேட்டரிக்கு ஆபத்து..!! எச்சரிக்கும் கூகுள்..

Tue Jun 3 , 2025
கடந்த சில நாட்களாக ஸ்மார்ட்போன் பயனர்கள் இன்ஸ்டாகிராமால் பேட்டரி சீக்கிரம் காலியாவதாக குற்றசாட்டை முன் வைத்துள்ளனர். இதன் பின்னணியில் செயலில் இல்லாதபோதும் இன்ஸ்டா பேட்டரியை பயன்படுத்துகிறது என்பது தெரியவந்துள்ளது. பயனர்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருந்த நிலையில், கூகுள் நிறுவனம் இன்ஸ்டாகிராம் பேட்டரி சிக்கலை அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டது. உடனடியாக, இந்த பிரச்சனையை சரிசெய்யும் விதமாக, இன்ஸ்டாகிராம் செயலிக்கான ஒரு புதிய அப்டேட்டை மே 28, அன்று வெளியிட்டது. பேட்டரி சீக்கிரம் […]
instagram update 1

You May Like