ஆண்டிக் கோலத்தில் இருக்கும் முருகனை வழிபட்டால் ஆண்டி ஆகி விடுவோமா?. உண்மை என்ன?

andi kolam murugan 11zon

அறுபடை முருகன் கோயில்களில் மூன்றாம் படை வீடு பழனி ஆகும். அங்கு முருகன் காலை மாலை என பல கோலங்களில் காட்சி தருகிறார். மேலும் அங்கு முருகனை ஆண்டி கோலத்தில் பார்த்து தரிசனம் செய்யும் பொழுது நாம் ஆண்டி ஆகி விடுவோம் என்று பொதுவான தவறான கருத்து நிலவி வருகிறது. அது உண்மைதானா என்பது பற்றி பார்ப்போம்.


போகர் சித்தர் பழனி தண்டாயுதபாணி சிலை வடிவமைக்கும் போதே அவர் ஆண்டிக் கோலத்தில் தான் சிலையை வடிவமைத்தார். மேலும் ஆண்டி கோலத்தில் இருக்கும் முருகனை நாம் தொடர்ந்து மூன்று பௌர்ணமிகள் தரிசனம் செய்தால எப்பேர்ப்பட்ட தீராத பிரச்சனைகளையும் நமதுதீராத கர்ம வினைகளையும் தீர்த்து விடுவார் என்பது நிதர்சனமான உண்மை . மேலும் முருகனின் வைத்தியநாதர் அலங்காரம் நோய் தீர்க்கும் அரு மருந்தாகும். நீண்டநாள் நோய்வாய்ப்பட்டவர்கள் வைத்தியநாதர் அலங்காரத்தில் முருகனை தரிசனம் செய்யும்பொழுது நிச்சயமாக நோயிலிருந்து விடுபடுவார்கள்.

நாமே நம்முடைய பிரச்சனைகளை உருவாக்கி இருப்போம். உருவாக்கிய பிரச்சனையில் இருந்து மீள முடியாமல் சிக்கலில் மாட்டி இருப்போம். அத்தகைய பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பவர் ராஜ அலங்கார முருகர் .சுய ஜாதகப்படி செவ்வாய் தசை நடப்பவர்கள்,ஜாதகத்தில் செவ்வாய் நீசம் பெற்றவர்கள். ஆண்டிக் கோலத்தில் இருக்கும் முருகனை மூன்று பௌர்ணமிகள் தரிசனம் செய்யும்பொழுது நல்ல பலன்களை குழந்தை தண்டாயுதபாணி நமக்கு அருள்வார்.

Readmore: கருட புராணம்: இந்த அறிகுறிகள் தோன்றினால் மரணம் நெருங்குவதாக அர்த்தமாம்..!!

KOKILA

Next Post

சிறுபான்மை மாணவர்களுக்கு ரூ.30 லட்சம் வரை கல்வி கடன்...! விண்ணப்பம் ஆரம்பம்...! முழு விவரம்

Wed Jun 4 , 2025
குறைந்த வட்டி விகிதத்தில் சுயதொழிலுக்காக வழங்கப்படும் கடன்திட்டத்தை சிறுபான்மையினர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அழைப்பு விடுத்துள்ளார். ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகம், மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள் ஆகிய அலுவலகங்களில் விண்ணப்பத்தை பெற்று வங்கி கோரும் ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். சென்னை மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கு, சுய வேலைவாய்ப்பு […]
money e1749025602177

You May Like