“ஏடிஎம்களில் பணம் எடுத்தால் இனி ரூ.500 வராது”..? மீண்டும் தடை செய்கிறதா மத்திய அரசு..? ஆர்பிஐ கொடுத்த பரபரப்பு விளக்கம்..!!

ATM Money 2025

500 ரூபாய் நோட்டை செல்லாது என அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


இந்தியாவில் கடந்த 2016 நவம்பர் 8ஆம் தேதி ரூ.1,000 மற்றும் ரூ.500 நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்வதாக பிரதமர் மோடி அறிவித்தார். அதன்பிறகு புதிய ரூ.500 கொண்டு வரப்பட்டது. அதேபோல், ரூ.1,000 நோட்டுக்கு பதில் ரூ.2000 நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது ரூ.2,000 நோட்டு மக்களிடம் புழக்கத்தில் இல்லை. அதை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற்றுக் கொண்டது.

இந்நிலையில் தான், தற்போது மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தற்போது அதிக புழக்கத்தில் இருக்கும் ரூ.500 நோட்டையும் மத்திய அரசு விரைவில் செல்லாது என அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாட்டில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தணையை ஊக்குவிக்கும் வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஏற்கனவே வங்கிகளின் ஏடிஎம்களில் மாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதற்கு முக்கிய காரணமே, ரிசர்வ் வங்கி பிறப்பித்த உத்தரவு தான். அதாவது, மக்களிடம் ரூ.100, ரூ.200 நோட்டுகளின் பணப்புழக்கத்தை அதிகரிக்க வேண்டும் வேண்டும் என்றும், இதனால் ஏடிஎம்களில் அந்த நோட்டுகளின் இருப்பை அதிகரிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது. இதனால் தான், மத்திய அரசு ரூ.500 நோட்டை தடை செய்யவுள்ளதாக தகவல் பரவ தொடங்கியது.

ஆனால், இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள இந்திய ரிசர்வ் வங்கி, “500 ரூபாய் நோட்டுக்கான டெண்டர் இன்னும் சட்டப்பூர்வமானதாக உள்ளது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கவும், ரூ.100, ரூ.200 நோட்டுகளின் புழக்கத்தை அதிகரிக்கவும், ரூ.500 நோட்டை தடை செய்வது தொடர்பாக எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. எனவே, ரூ.500 நோட்டு தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும்” என்று தெரிவித்துள்ளது.

Read More : “லியோ படத்தின் ரூ.35 லட்சத்தை இவரே ஆட்டைய போட்டாரு”..!! பாலியல் புகார் வேற..!! தினேஷ் மாஸ்டருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சங்கம்..!!

CHELLA

Next Post

நிர்வாணமாக அடிப்பது.. கன்னித்தன்மை பரிசோதனைகள்.. பெண்களின் நரகமாக இருக்கும் ரகசிய சிறை.. எந்த நாட்டில் உள்ளது?

Wed Jun 4 , 2025
சவுதி அரேபியாவில் உள்ள டர் அல்-ரியாயா என்ற இடம் பெண்களுக்கான ரகசிய சிறையாக உள்ளது. இதுதொடர்பான அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன. உலகின் பணக்கார மற்றும் சக்திவாய்ந்த இஸ்லாமிய நாடாக சவுதி அரேபியா அறியப்படுகிறது. முஸ்லிம்களின் இரண்டு புனித தலங்களான மெக்கா மற்றும் மதீனா ஆகியவை இங்கு தான் உள்ளன.. மேலும் இந்த நாடு அரச குடும்பம், எண்ணெய் வளம் மற்றும் பெரிய கட்டிடங்களுக்கு பிரபலமானது. வெளியில் இருந்து பார்த்தால், […]
Gemini Generated Image 5zmmo15zmmo15zmm fotor 2025060320754

You May Like