இன்றைக்கு பட்டா வாங்குவது என்பது பலருக்கும் சவாலான விஷயமாகவே உள்ளது. பட்டாவுக்கு விண்ணப்பிப்பது எளிதாக இருந்தாலும், நடைமுறையில் உள்ள பழக்கங்கள் மக்களை சிரமத்திற்கு ஆளாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பொதுமக்கள் விண்ணப்பித்த 30 நாட்களில் பட்டா வழங்க வேண்டும் என்றும் காலதாமதம் செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது.
புதிதாக நிலம் வாங்குவோர், வீடு வாங்குவோர் பத்திரப்பதிவு முடிந்த பின், விஏஓ, சர்வயேர், தாசில்தார் என ஒவ்வொருவரையும் சந்திக்க வேண்டும். நிலம் குறித்து விஏஓ விசாரித்து, பின்னர் சர்வேயர் நில அளவீடு செய்து, இறுதியாக அவர்களின் பரிந்துரைகளின் பேரில், நிலத்திற்கு தாசில்தார் பட்டா வழங்குவது இதுநாள் வரை நடைமுறையில் இருந்து வந்தது.
ஆனால், இப்போது அப்படி கிடையாது. உட்பிரிவு செய்ய வேண்டியது இல்லாத சொத்துகளுக்கு பத்திரப்பதிவு செய்தவுடன், உடனடியாக பட்டா பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. அதற்கு விற்பவர் பெயரில் பட்டா இருக்க வேண்டும் என்பது மட்டும் தான் நிபந்தனை.
பட்டா வாங்க என்ன செய்ய வேண்டும்..?
அதன்படி சொத்து வாங்குவோர், சொத்தை வாங்குவதற்கு முன்பே அவரது பெயரில் தனிப்பட்டா வாங்க வேண்டும். பிறகு, பத்திரப்பதிவு செய்ய வேண்டும். அப்படி செய்தால் பட்டா எளிதாகவே கிடைத்துவிடும். இல்லையென்றால், பட்டா வாங்குவது கஷ்டமாக மாறிவிடும்.