நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கான வருமான ஆதரவுத் திட்டமாக மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் யோஜனா திட்டம் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 நிதியுதவி 3 தவணை உதவியை வழங்கி வருகிறது. இத்திட்டத்தின்படி, இதுவரை மொத்தம் 19 தவணை நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 9.8 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
20-வது தவணை எப்போது வெளியிடப்படும்..?
அதாவது, 20-வது தவணை நிதி ஜூன் 2025-இல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி இதுதொடர்பான அறிவிப்பை இம்மாத இறுதிக்குள் வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே, பின் கிசான் திட்டத்தின் அடுத்த தவணை தொகையை பெற வேண்டுமென்றால், e-KYCஐ விவசாயிகள் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
பிஎம் கிசான் e-KYC கட்டாயம் :
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் “PMKISAN”-ல் பதிவு செய்யப்பட்ட விவசாயிகள் eKYC செயல்முறையை முடித்திருக்க வேண்டும். பிஎம் கிசான் போர்ட்டலில் ஓடிபி அடிப்படையிலான eKYC அல்லது பொது சேவை மையத்தில் பயோமெட்ரிக் அடிப்படையிலான eKYC மூலம் e-KYC செயல்முறையை முடிக்கலாம்.
பிஎம் கிசான் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி..?
* https://pmkisan.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
* ‘New Farmer Registration’ என்பதை கிளிக் செய்ய வேண்டும். உங்கள் ஆதார் எண் மற்றும் கேப்ட்சாவை உள்ளிட வேண்டும்.
* பின்னர், விவரங்களை நிரப்பி, ‘ஆம்’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். படிவத்தை பூர்த்தி செய்து, அதை சமர்ப்பித்து பிரிண்ட்அவுட் எடுக்க வேண்டும்.
* ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், நீங்கள் பிஎம் கிசான் உதவி எண்களான 155261 மற்றும் 011-24300606ஐ அழைக்கலாம்.