fbpx

வங்கி பண மோசடி வழக்கில் 4 பேருக்கு சிறை தண்டனை…! பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு…!

யுனைட்டெட் பேங்க் ஆப் இந்தியாவின் பெங்களூரு கண்டோன்மென்ட் கிளையில் துபாயிலிருந்து மென்பொருள் கொள்முதலுக்காக கடன் பெற்ற நிறுவனம், இந்த நிதியை வேறு பணிகளுக்கு மாற்றியதோடு, பாதுகாப்புத் தொகையையும் செலுத்தாதது கண்டறியப்பட்டது. இதனால் வாராக்கடன் மூலம் வங்கிக்கு 18 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இது தொடர்பான வழக்கை சிபிஐ பதிவு செய்து விசாரித்தது.

பெங்களூருவில் உள்ள சிபிஐ வழக்குகளை விசாரிக்கும் 21-வது நகர சிவில் மற்றும் அமர்வு நீதிபதியும் தனி நீதிமன்ற நீதிபதி முன் நடைபெற்ற இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேரில் 4 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், ஒருவர் மரணமடைந்ததால் வழக்கில் இருந்து நீக்கப்பட்டார். எஞ்சிய 6 பேரில் ஒருவருக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனையும், 12 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

Vignesh

Next Post

டீம் தக்க்ஷாக்கு 200 டிரோன் ஆர்டர் கொடுத்த இந்திய ராணுவம்..!

Wed Aug 9 , 2023
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித்குமார். அதையும் தாண்டி இவர் மிகப்பெரிய கார் பைக் விரும்பியாக பிரபலமானவர். நடிகர் அஜித்குமார் ஆட்டோமொபைல் போல ஏரோநாட்டிக்ஸ் துறையிலும் அதிக ஆர்வமுடன் செயல்படுபவர். சென்னை எம்ஐடி-யை சேர்ந்த மாணவர் குழு இவர் தலைமையில் ஆலோசனை பெறப்பட்டு டீம் தக்க்ஷா என்ற பெயரில் இணைந்து செயல்பட்டனர். கடந்த கொரோனா காலகட்டத்தில் கூட இவர்கள் உருவாக்கிய டிரோன் தான் அரசுக்கு பல […]

You May Like