வாஸ்து படி கற்பூரத்தை எரிப்பதன் மூலம் அனைத்து தெய்வங்களையும் ஈர்க்க உதவுகிறது. இந்து நம்பிக்கைகளின்படி இதன் பயன்பாடு தெய்வங்களை மகிழ்விக்கும் ஒரு வழியாகும். வாஸ்து சாஸ்திரத்தின்படி அதில் சில சிறப்புப் பொருட்களைக் கலந்து கற்பூரத்தை எரித்தால் அதன் புகை முழுவதும் பரவுகிறது. கற்பூரத்தை எரிப்பது எல்லாம் வல்ல இறைவனுடன் இணக்கமாக இருப்பதன் அடையாளமாகும். கற்பூரத்தில் என்னென்ன பொருட்களைக் கலந்து எரிக்க வேண்டும் என்பது தெரிந்து கொள்வோம்.
வாசனை இலைகளை (பிரியாணி இலைகள் என்பார்கள்) கற்பூரம் சேர்த்து ஏற்றுவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. இதிலிருந்து வரும் வாசனை நல்ல நேர்மறை ஆற்றலை வீட்டிற்குள் கொண்டு வருமாம்.. கற்பூரத்துடன் இலவங்கப்பட்டையை சேர்த்து ஏற்றுவதன் மூலம், சுக்கிரன் மற்றும் செவ்வாய் அதிர்ஷ்டம் தரும். இதனால் வீட்டில் சந்தோஷத்திற்கு பஞ்சம் இருக்காது. பெரிய ஏலக்காயை கற்பூரம் சேர்த்து ஏற்றுவதல் வீட்டில் உள்ள எதிர்மறை தன்மை நீங்கும். மனத்தில் நல்ல எண்ணங்கள் தோன்றும்.
கற்பூரத்துடன் கிராம்புகளை ஏற்றுவது ஜோதிடத்தில் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. கருமிளகை கற்பூரத்துடன் சேர்த்து ஏற்றுவது நல்லது. இதற்கு சனி பகவான் நேரடியாக அருள் புரிவார். அதானல் வீடு முன்னேறும். மஞ்சள் அல்லது கருப்பு கடுக்காயை கற்பூரத்துடன் சேர்த்து ஏற்றவும் . இதைச் செய்வதன் மூலம் கண் திருஷ்டி வீட்டிற்குள் நுழையாது மற்றும் வீடு பாதுகாப்பாக இருக்கும் என்ப்து நம்பிக்கை.
Readmore: இன்று வெள்ளிக்கிழமை!. வாராகி அம்மனுக்கு பஞ்ச தீபத்தை ஏற்றி வணங்கனால் பண நெருக்கடி நீங்கும்!