இதய ஆரோக்கியம் மற்றும் இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துவது மட்டுமின்றி, வேர்க்கடலையில் காணப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மூளை திசுக்களை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தில் இருந்து பாதுகாக்க உதவுவதோடு அறிவாற்றல் சிதைவின் வாய்ப்பைக் குறைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் வைட்டமின் ஈ, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை வேர்க்கடலையில் காணப்படும் முக்கிய வைட்டமின்கள் ஆகும். அதேபோல், வேர்க்கடலையை அதிகமாக சாப்பிட்டாலும் எதிர்மறை விளைவுகள் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.
வேர்க்கடலை சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிக்கக் கூடாது என்று சில நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். வேர்க்கடலை சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடித்தால், உணவு ஜீரணமாகாமல் செரிமானப் பிரச்சனைகள் வரலாம் என்று தெரிவிக்கின்றனர். மேலும், இதன் காரணமாக, வயிற்று வலி, மலச்சிக்கல், வாயுத் தொல்லை உள்ளிட்ட வயிற்று உபாதைகள் ஏற்படலாம் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
வேர்க்கடலை ஒரு சூடான உணவாக கருதப்படுகிறது. ஆகையால், இதை சாப்பிட்ட பின்பு தண்ணீர் குடிக்கும்போது உடலில் வெப்பநிலை ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு சளி அல்லது இருமல் ஏற்படலாம். அதேபோல், ஒவ்வாமை இருப்பவர்கள் வேர்க்கடலையை தவிர்ப்பது நல்லது. வேர்க்கடலை உள்ளிட்ட எந்த உணவையும் சாப்பிட்ட பிறகு உடனடியாக தண்ணீர் குடிப்பது, செரிமான செயல்முறையை மாற்றியமைத்து வீக்கம் மற்றும் அஜீரணத்தை ஏற்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.
Readmore: பெண்களே!. அந்தரங்க உறுப்புகளை அடிக்கடி சோப்பால் சுத்தம் செய்கிறீர்களா?. ஆபத்து!.