இறந்த உடல்களுடன் வாழும் விசித்திர பழங்குடி மக்கள்.. எங்க இருக்காங்க தெரியுமா..?

tribal 2

உலகம் முழுவதும் பல வினோத சம்பிரதாயங்கள் இருப்பது புதுமையல்ல. ஆனால், இந்தோனேசியாவின் ஒரு இன மக்கள் இறந்த உடல்களைப் பாதுகாத்து வைக்கும் மரபால் உலக ஆராய்ச்சியாளர்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்தோனேசியா, சுமார் 17,000 தீவுகளால் ஆன ஒரு நாடு. சுமத்ரா, ஜாவா, சுலவேசி போன்ற தீவுகள் இதில் அடங்கும். இதில் வாழும் 30 கோடியே மக்கள் தொகையில், டோராஜன் எனும் இனக்குழுவினர் குறிப்பிடத்தக்கவர்கள்.


இந்த டோராஜன் சமூகத்தில், ஒருவர் உயிரிழந்த பின்னும், அவரது உடலைப் பாதுகாத்து, அவருடன் வாழும் பண்பாடு உள்ளது. மரணத்தைக் கடைசி முடிவாகக் கருதாமல், அந்த ஆன்மா இன்னும் உயிருடன் இருக்கிறது என நம்புகின்றனர். பார்மால்டிஹைட் போன்ற வேதிபொருட்கள் மூலம் அந்த உடல்களை பாதுகாத்து வைக்கிறார்கள். அவ்வப்போது, அந்த உடல்களுக்கு உணவு, தண்ணீர், புதிய உடைகள் போன்றவை வழங்கப்படுவதும் விசித்திரமான பண்பாடாகும். மேலும், இந்த உடல்களை வீட்டில் வைத்தே குடும்பத்துடன் சேர்ந்து வாழ்கின்றனர்.

“இவ்வாறு செய்பவர்கள் அதிர்ஷ்டம் பெறுவார்கள்” என அவர்கள் நம்புகின்றனர். மரணத்தைச் சோகமாக அல்லாது இயற்கையானதொன்றாக ஏற்கும் இந்த டோராஜன் மக்கள், சிறுவயதிலிருந்தே மரணத்துடன் எப்படி ஒத்துழைக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்கிறார்கள். ஆய்வாளர்கள் இந்தோனேசியாவில் உள்ள ஆயிரக்கணக்கான வினோதங்களில், டோராஜன் சமூகத்தின் மரணக் கலாசாரம் ஒரு மிக முக்கியமான பண்பாட்டு ஆச்சரியம் என்கிறார்கள்.

Read more: 2030ல் உலகத்தை கலங்கவைக்கும் புதிய வைரஸ்.. ஜப்பானிய பாபா வாங்காவின் பகீர் கணிப்பு..!!

Next Post

விண்வெளி மையத்தில் பணிபுரிய விருப்பமா..? ரூ.1.4 லட்சம் வரை சம்பளம்.. எப்படி விண்ணப்பிப்பது..? 

Sun Jun 8 , 2025
விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் (VSSC), மத்திய அரசு வேலைக்காக காத்திருக்கும் தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் (VSSC) இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (ISRO) ஒரு பகுதியாகும். இந்த அறிவிப்பின்படி, பல்வேறு தொழில்நுட்ப மற்றும் அறிவியல் துறைகளில் மொத்தம் 147 வேலைகள் நிரப்பப்படும். விண்வெளி மையத்தில் பணிபுரிவதன் மூலம் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சிக்கு பங்களிக்க விரும்பும் இளைஞர்களுக்கு இது ஒரு நல்ல […]
vssc job

You May Like