கொங்கு மண்டலத்திற்கு வந்தால் கொலை..!! சென்னைக்கு போனால் கூலிப்படையை ஏவி கொலை..!! நிம்மதியே இல்ல..!! அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு..!!

Annamalai 2025 1

கொங்கு மண்டலத்தில் முதியோர்களை குறிவைத்து கொலை செய்கிறார்கள் என்று பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.


மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் பாஜக தென் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றிருந்தார். இதில் பேசிய தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, “எந்த வேலையுமே செய்யாமல், கடந்த 4 ஆண்டுகளாக திமுக தனது ஆட்சியை ஓட்டி வருகிறது. தமிழ்நாட்டில் மக்கள் நிம்மதியாகவே இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சார்கள் இங்கு உலவிக் கொண்டிருக்கின்றனர். மக்களின் பணத்தை கொள்ளையடித்து சினிமா தயாரிக்கக் கூடிய தம்பிகள் இங்கு உலவிக் கொண்டிருக்கும்போது, மக்கள் எப்படி நிம்மதியாக இருப்பார்கள்.

இதையெல்லாம் தாண்டி, நடுத்தர மக்கள் வெட்டுப்படாமல் வீட்டில் பாதுகாப்பாக இருக்க முடியுமா..? என்றால் அதுவும் முடியாது. கொங்கு மண்டலத்தில் முதியோர்களை குறிவைத்து கொலை செய்கிறார்கள். தென் பகுதிகளில் சாதிய வன்கொடுமையால் கொல்கிறார்கள். சென்னையில் கூலிப்படைகளை ஏவி கொலை செய்கிறார்கள். தமிழ்நாட்டில் எங்கு போனாலும் நிம்மதியே இல்லை.

2012இல் இந்தியாவில் 180 ரூபாய்க்கு கீழே வருமானம் பெறக்கூடியவர்கள் 16.2 சதவீதம் பேர் இருந்தனர். ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு 2023இல் இது வெறும் 2.3 சதவீதத்துக்கு கொண்டு வந்துள்ளோம். இது மிகப்பெரிய சாதனை. ஏப்ரல் 2025இல் கூட, உலகில் அதிவேகமாக வறுமையை ஒழித்த முதல் நாடாக இந்தியா இருக்கிறது என உலக வங்கி ஆய்வறிக்கை தெரிவித்திருக்கிறது. இது தான் மோடியின் சாதனை.

அடுத்தாண்டு (2026) தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும். திமுவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். 2026ஆம் ஆண்டு நமது ஒற்றை இலக்கு, திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டியது ஒன்றே ஒன்று தான். இதுதான் நம்முடைய இலக்கு” என்று தெரிவித்தார்.

Read More : நோட்..! திறனாய்வு தேர்வு உதவித்தொகைக்கான ஆன்லைன் பதிவில் புதிய மாற்றம்…!

CHELLA

Next Post

கடலூர் உள்ளிட்ட 9 மாவட்ட மக்களே.. வெளுத்து வாங்கும் கனமழை...! வானிலை மையம் எச்சரிக்கை

Mon Jun 9 , 2025
தமிழகத்தில் நாளை 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வரும் 14-ம் தேதி வரை சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களிலும், […]
rain

You May Like