ராஜா ரகுவன்ஷியை 4வது முயற்சியில் அவரின் மனைவி கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ராஜா ரகுவன்ஷியின் கொலை வழக்கில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அவரது மனைவி சோனம் ரகுவன்ஷி 3 முறை தனது கணவரை கொல்லை முயற்சித்ததாகவும், ஆனால் அவரை கொல்ல முடியவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். புதுமணத் தம்பதிகள் மேகாலயாவில் தேனிலவு சென்றிருந்தபோது, அவரது மனைவி சோனம் மற்றும் அவரது காதலன் ராஜா குஷ்வாஹா ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்ட 3 கொலையாளிகளால் ராஜா கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கிழக்கு காசி ஹில்ஸ் எஸ்பி விவேக் சையம் இதுகுறித்து பேசிய போது “ ராஜா ரகுவன்ஷி 4-வது முயற்சியில் கொல்லப்பட்டார். முதல் முயற்சி குவஹாத்தியில் மேற்கொள்ளப்பட்டது, அதைத் தொடர்ந்து மேகாலயாவின் சோஹ்ராவில் இரண்டு கொலை முயற்சிகள் நடந்தது.. இந்த முயற்சிகள் தோல்வி அடைந்தது.. இறுதியில் வெய்சாவ்டோங் நீர்வீழ்ச்சியில் அவரைக் கொன்றனர்.
“முன்னர் வெவ்வேறு இடங்களில் அவரைக் கொல்ல அவர்கள் விரும்பினர். கௌஹாத்தியில் ராஜாவை கொலை செய்யவும் அவர்கள் விரும்பினர், ஆனால் அது பலனளிக்கவில்லை. நோங்கிரியாட்டில் அவரைக் கொல்ல விரும்பினர், ஆனால் உடலை அப்புறப்படுத்த இடம் கிடைக்கவில்லை, ராஜா கழிப்பறைக்குச் சென்றபோது மவ்லாக்கியத்துக்கும் வெய்சாவ்டோங்கிற்கும் இடையில் கொலை செய்ய விரும்பினர். ஆனால் அது பலனளிக்கவில்லை. இறுதியாக வெய்சாவ்டோங்கில் கொலை செய்தார்கள்,” என்று எஸ்பி கூறினார்.
“திருமணத்திற்குப் பிறகு காமாக்யா கோயிலுக்கு செல்ல சோனமும் ராஜாவும் குவஹாத்தியை அடைந்தனர். கொலையாளிகள் ஏற்கனவே மே 19 அன்று வந்துவிட்டனர். குவஹாத்தியில் ராஜாவைக் கொல்வதே அவர்களின் ஆரம்பத் திட்டமாக இருந்தது, ஆனால் சோனம் ஷில்லாங் மற்றும் சோஹ்ராவுக்குச் செல்ல திட்டமிட்டிருந்தார். எனவே, இந்த திட்டம் கைவிடப்பட்டது,” என்று அவர் மேலும் கூறினார்.
“சோனம் உட்பட அனைத்து குற்றவாளிகளும் கொலையை ஒப்புக்கொண்டனர். மூளையாக செயல்பட்டது அவரது காதலன் ராஜ் குஷ்வாஹா தான் என்றும் அவர் கூறினார்.
மேகாலயா ஹனிமூன் கொலை பின்னணி
24 வயதான சோனமும் 28 வயதான ராஜாவும் மே 11 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். சில நாட்களுக்குப் பிறகு காமாக்யா கோயிலுக்குச் சென்றனர். மே 20 ஆம் தேதி, அவர்கள் மேகாலயாவை அடைந்தனர். 3 நாட்களுக்குப் பிறகு, இருவரும் காணாமல் போனார்கள். ஜூன் 2 ஆம் தேதி நீர்வீழ்ச்சிக்கு அருகிலுள்ள ஆழமான பள்ளத்தாக்கில் ராஜாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. ராஜாவின் உடலை பள்ளத்தாக்குக்கு கொண்டு செல்ல சோனம் உதவியதாக காவல்துறை தெரிவித்தனர்.
ஜூன் 9 ஆம் தேதி உத்தரபிரதேசத்தின் காஜிப்பூரில் உள்ள ஒரு சாலையோர தாபாவில் சோனம் மீண்டும் தோன்றினார். அப்போஒது கைது செய்யப்பட்டு ஷில்லாங்கிற்கு கொண்டு வரப்பட்டார். புதன்கிழமை, மேகாலயா நீதிமன்றம் 5 குற்றவாளிகளையும் 8 நாள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டது. ஒரு சிறப்பு விசாரணை குழு அவர்களை தனித்தனியாகவும் ஒன்றாகவும் விசாரித்து வருகிறது.
கொலைக்கு முன்னர் சோனம் ராஜுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும், மே 16 முதல் 23 வரை 30 அழைப்புகள் நடந்ததாகவும், அவற்றில் நள்ளிரவு உரையாடல்கள், மெசேஜ் அனுப்புதல் ஆகியவை அடங்கும் என்றும் உ.பி. போலீசார் தெரிவித்தனர். கண்காணிப்பு தரவுகளின்படி, திருமணத்திற்கு 4 நாட்களுக்குப் பிறகு, மே 15 ஆம் தேதி, இந்தூரில் உள்ள அவரது வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு ஓட்டலில் இருவரும் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.
சதித்திட்டத்தை வரைபடமாக்க டிஜிட்டல் தடயவியல் குழுக்கள் இப்போது ஜிபிஎஸ் பதிவுகள், காப்புப்பிரதிகள் மற்றும் நீக்கப்பட்ட கோப்புகளை ஆய்வு செய்து வருகின்றன. விசாரணை தீவிரமடைந்து வரும் நிலையில் இந்த கொலை வழக்கில் மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
Read More : “இன்னும் என்னால் இதை நம்ப முடியவில்லை..” அகமதாபாத் விமான விபத்தில் உயிர் பிழைத்த நபர் உருக்கம்..