அமெரிக்காவிலிருந்து மும்பைக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக கொல்கத்தாவில் தரையிறக்கப்பட்டது.
இன்று ஜூன் 17 செவ்வாய்க்கிழமை அதிகாலை சான் பிரான்சிஸ்கோவிலிருந்து மும்பைக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், அவசரமாக கொல்கத்தாவில் தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த பிரச்சனையின் தன்மை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. அனைத்து ஏர் இந்தியா பயணிகளும் கொல்கத்தா விமான நிலையத்தில் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர், மேலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
ஏர் இந்தியாவின் AI180 என்ற விமானம் விமான நிலையத்திற்கு 00:45 மணிக்கு சரியான நேரத்தில் வந்தது, ஆனால் இடது இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 05:20 மணிக்கு, அனைத்து பயணிகளையும் விமானத்திலிருந்து இறங்கச் சொல்லி விமானத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. விமானப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அவர்களை இறக்க முடிவு செய்யப்பட்டதாக விமானத்தின் விமானி பயணிகளிடம் கூறினார்.
கடந்த 12-ம் தேதி அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஒரு மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதியதில் தரையில் இருந்தவர்கள் உட்பட சுமார் 270 உயிரிழந்தனர். இந்த விமான விபத்து ஒட்டுமொத்த நாட்டையுமே உலுக்கியது. இந்த விமான விபத்து நடந்ததில் இருந்தே, இதுபோன்ற பல தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படும், விமானம் அவசரமாக தரையிறக்கப்படும் சம்பவங்களும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.
முன்னதாக நேற்று டெல்லிக்கு புறப்பட்ட விமானங்களில் ஒன்று சந்தேகத்திற்குரிய தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புறப்பட்ட பிறகு அதன் தொடக்க இடத்திற்குத் திரும்பியது. ஜூன் 15 ஞாயிற்றுக்கிழமை, டெல்லியில் இருந்து சூரிச் செல்லும் ஏர் இந்தியா விமானம் போயிங் 787-8 விமானத்தில் கட்டாய சோதனைகள் காரணமாக தாமதமானது, இதன் விளைவாக இரவு சுவிட்சர்லாந்திற்கு தாமதமாக சென்றது.
நேற்று மற்றொரு ஏர் இந்தியா விமானம் விமானம் நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஹாங்காங்கிற்குத் திரும்பியது. AI 315 என்ற இந்த விமானம் ஹாங்காங்கில் பாதுகாப்பாக தரையிறங்கியது, மேலும் அனைத்து பயணிகளும் விமானத்திலிருந்து இறங்கினர் என்று விமான நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் விமானம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.
ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஜூன் 16, 2025 அன்று ஹாங்காங்கிலிருந்து டெல்லிக்கு இயக்கப்படும் AI315 விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஹாங்காங்கிற்குத் திரும்பியது. விமானம் ஹாங்காங்கில் பாதுகாப்பாக தரையிறங்கியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சோதனைகளுக்கு உட்பட்டுள்ளது. பயணிகளை விரைவில் அவர்களின் இலக்கு டெல்லிக்கு அழைத்துச் செல்ல மாற்று ஏற்பாடுகள் திட்டமிடப்பட்டுள்ளன,” என்று தெரிவித்துள்ளது.
Read More : இனி டோல்கேட் இருக்காது?. சுங்க வரி குறித்து 3 நாட்களில் நல்ல செய்தி வரும்!. நிதின் கட்கரி அறிவிப்பு!.