தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் பல்வேறு கோயில்களில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவையில் உள்ள வன பத்ரகாளியம்மன் கோயிலில் 17 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியிடங்கள் விவரம்:
சீட்டு விற்பனையாளர் – 01
காவலர் – 02
கூர்க்கா – 01
ஏவலர் – 01
சலவை தொழிலாளர் – 01
திருவலகு- 03
பெருக்குபவர் – 05
உப கோயில் எழுத்தர் – 01
ஓதுவார் – 01
உபகோயில் மேளம் குழு – 01
கல்வி தகுதி:
* சீட்டு விற்பனையாளர், உப கோயில் எழுத்தர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி தகுதி பெற்று இருக்க வேண்டும்.
* காவலர், கூர்கா, ஏவலர், சலவை தொழிலாளர், திருவலகு, பெருக்குபவர், ஓதுவார் ஆகிய பணியிடங்களுக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும்.
* உபகோயில் மேளம் குழு: தமிழில் எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும். சமய நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் அல்லது வேறு ஏதேனும் நிறுவனங்களால் நடத்தப்படும் இசைப்பள்ளிகளில் இருந்து பெறப்பட்ட இசைத்துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
* இந்து மதத்தை சேர்ந்தவராகவும் தமிழ்நாட்டை சார்ந்தவராகவும் இருக்க வேண்டும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 01.07.2024 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
சம்பளம்: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.10,000 முதல் 58 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: உதவி ஆணையர்/ செயல் அலுவலர், அருள் மிகு வனபத்ரகாளியம்மன் கோயில், தேக்கம்ப்பட்டி, நெல்லித்துறை அஞ்சல், மேட்டுப்பாளையம் வட்டம், கோவை மாவட்டம், 641 301.
Read more: இதை சாப்பிட்டால் சிறுநீரகம் செயலிழப்பது நிச்சயம்..!! – எச்சரிக்கும் மருத்துவர்கள்