பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 4500 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழகத்தில் 202 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
காலிப்பணியிடங்கள்: 4500 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: குறைந்தபட்சம் 20 வயது முலத் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். மாதம் சம்பளம் ரூ. 15,000/- ஆகும்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் ரூ.800. எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் ரூ.600
தேர்வு செய்யும் முறை: இந்த பணியிடங்களுக்கு கணினி வழித் தேர்வு மற்றும் வட்டார மொழித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள், மத்திய வங்கியின் இணையதளத்திற்கு (https://www.centralbankofindia.co.in/) சென்று ஆன்லைன் படிவத்தை நிரப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 23.06.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.