மீன்வளத் துறை வேலை வாய்ப்பு.. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிங்க..!! செம சான்ஸ்..

job 1 1

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை தூத்துக்குடி மாவட்டத்தில் சாகர் மித்ரா காலிப்பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


தமிழ்நாடு அரசின் மீன்வளத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் சாகர் மித்ரா பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.06.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

கல்வி தகுதி: சாகர் மித்ரா பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் மீன்வள அறிவியல் / கடல் உயிரியல் / விலங்கியல் ஆகியவற்றில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இல்லையெனில், வேதியியல்/ தாவரவியல்/ உயிர்வேதியியல்/ நுண்ணுயிரியல்/ இயற்பியல் ஆகிய துறைகளில் பட்டம் பெற்றவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்களாக கருதப்படுவார்கள். அத்துடன், விண்ணப்பதாரருக்கு கணினி குறித்த டிப்படை அறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் (IT) அறிவு இருக்க வேண்டும்.

வயது வரம்பு: இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.07.2024 அன்றைய தேதியின்படி 35 வயது நிறைவடையாதவர்களாக இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பளம்: சாகர் மித்ரா பதவிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.15, 000 வரை சம்பளம் வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 30.06.2025 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு உதவி இயக்குநர் அலுவலகம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, வடக்கு கடற்கரை சாலை, மீன்வளத்துறை வளாகம், தூத்துக்குடி என்ற முகவரியில் வாரவேலை நாட்களில் நேரில் தொடர்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

Read more: கர்ப்பிணி பெண்கள் தினமும் எவ்வளவு தூரம் வரை நடக்கலாம்..? – மருத்துவ நிபுணர்கள் கூறும் முக்கிய அறிவுரை..!

Next Post

இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 657 பேர் பலி.. உச்சக்கட்டத்தை எட்டும் மோதல்..!!

Sun Jun 22 , 2025
இஸ்ரேல் கடந்த வாரம் முதல் நடத்தி வரும் தாக்குதலில் ஈரானில் 657 பேர் பலியாகி இருப்பதாக அமெரிக்காவை சேர்ந்த மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கை மீண்டும் உலுக்கும் வகையில், இஸ்ரேல் – ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 13) தொடங்கிய இந்த தாக்குதல்கள், 9-வது நாளாக தொடர்ந்து வருகிறது. இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு துணைநிற்காமல், தாக்குதல்களை பரஸ்பரமாக நடத்தி வருகின்றன. […]
ISRAEL IRAN

You May Like