நடிகர் விஜய் தேவரகொண்டா மீது எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு!. பழங்குடி சமூகம் குறித்த சர்ச்சை பேச்சால் நடவடிக்கை!.

vijay devarakonda case 11zon

நடிகர் சூர்யா பட புரமோஷன் நிகழ்ச்சியில் பழங்குடி சமூகம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததற்காக தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா மீது எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தேவரகொண்டா, பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, பாகிஸ்தானியர்கள் 500 ஆண்டு பழமையான பழங்குடியின மக்கள் போல் அறிவில்லாமல் இருக்கின்றனர் என கடுமையாக விமர்சனம் செய்தார். இதையடுத்து பழங்குடியின மக்களை இழிவாக பேசியதாக அவர் மீது சைபராபாத்தில் உள்ள ராய்துர்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதாவது, சைதாபாத்தை சேர்ந்தவரும் பழங்குடி சமூகங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் மாநிலத் தலைவருமான நேனாவத் அசோக் குமார் நாயக் இந்தப் புகாரை அளித்துள்ளதாக ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன் பின்னர் அவர் தனது பேச்சுகள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக விளக்கம் தெரிவித்தார். இது குறித்து கடந்த மே 3 ஆம் தேதி அவர் தனது எக்ஸ் பதிவில், “நமது நாட்டின் பழங்குடியின மக்களை இழிவுபடுத்தும் நோக்கத்தில் பேசவில்லை, அவர்களை மிகவும் மதிக்கிறேன். நமது ஒற்றுமையை பற்றித்தான் பேசினேன். இந்தியா எப்படி ஒன்றாக இருக்கிறதோ நம் மக்கள் அப்படியே இருக்கிறோம்.

நாமும் ஒன்றாக முன்னேற வேண்டும் என்பதைத்தான் பேசினேன். நான் எப்படி இந்தியா மக்களை பாகுபாடு காண்பித்து இழிவுபடுத்தி பேசுவேன். அவர்களும் என் குடும்பம் போலத்தான். நான் பயன்படுத்திய பழங்குடி என்ற வார்த்தை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மனித சமூகத்தின் மோதலை குறிக்கிறது. ஆனால், அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது” என்று கூறியிருந்தார். இந்த நிலையில் விஜய்தேவரகொண்டா மீது அந்த புகாரின் அடிப்படையில் கடந்த ஜூன் 17 ஆம் தேதியன்று எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Readmore: கொசுவைப் போல உருவாக்கப்பட்ட ட்ரோன்!. சீனா இராணுவத்தில் புதிய புரட்சி!. எதிர்கால போர்களை மாற்றுமா?

KOKILA

Next Post

உயர்கல்வி வழிகாட்டி பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களுக்கான மண்டல வாரியாக ஒருங்கிணைப்பு கூட்டம்...!

Mon Jun 23 , 2025
2025-2026 ஆம் கல்வியாண்டு வட்டார அளவிலான உயர்கல்வி வழிகாட்டி மையமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மையங்களில் பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களுக்கான மண்டல வாரியாக ஒருங்கிணைப்பு கூட்டம் நாளை நடைபெற உள்ளது. 2024-25 ஆம் கல்வியாண்டு முதல் வட்டார அளவில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உயர் கல்வி வழிகாட்டி மையம் (Career Guidance Centre) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக 2025 2026 ஆம் கல்வியாண்டிலும் வட்டார அளவிலான உயர்கல்வி வழிகாட்டி மையங்கள் செயல்படுத்தப்பட […]
school 2025 2

You May Like