இனி இந்த பெண்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 கிடைக்கும்.. இந்த முறை மிஸ் பண்ணிடாதீங்க..

Gemini Generated Image 1org9g1org9g1org 1

ஜூலை 15-ம் தேதி தொடங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்ட விரிவாக்க பணிகள் குறித்து அடுத்தக்கட்ட தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்பது தமிழக அரசால் செயல்படுத்தப்படும் ஒரு முக்கியமான நலத்திட்டமாகும். 2023 ஆம் ஆண்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். குடும்ப தலைவிகளுக்கு பொருளாதார சுதந்திரத்தை வழங்கும் நோக்கத்தோடு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் மூலம் மாதம் ரூ.1000 குடும்ப தலைவிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கோடிக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி ரூ.1000 பணம் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.


சமீபத்தில் தஞ்சையில் நடந்த அரசு விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அப்போது “ மக்களின் குறைகளை தீர்க்க உங்கள் பகுதிகளிலேயே, ஜூலை 15 முதல் தமிழ்நாடு உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடத்தப்படும். நகரப்பகுதிகளில் 3768 முகாம்கள், 6232 முகாம்கள் என மொத்தம் 10000 முகாம்கள் நடத்தப்படும். இதில் மருத்துவ முகாம்களும் நடத்தப்படும். கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் விடுபட்ட தகுதியுள்ள பெண்கள், இந்த முகாம்களில் விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் முடிவெடுக்கப்படும்.” என்று கூறியிருந்தார்.

அதாவது ஏற்கனவே விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட பெண்கள், தகுதியுடைய பெண்கள் இந்த முகாமில் விண்ணப்பிக்கலாம் என்பது தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, ஜூலை 15-ம் தேதி தொடங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்ட விரிவாக்க பணிகள் குறித்து அடுத்தக்கட்ட தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. அந்த வகையில் தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது.. அதன்படி கடந்த முறை மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்களும் இந்த முறை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆவணங்கள் சரியில்லாமல் நிராகரிக்கப்பட்டவர்கள், கடந்த சில மாதங்களில் திருமணமான பெண்களும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் குடும்ப தலைவி மட்டுமே இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டியது இல்லை என்றும், ஒரு குடும்பத்தில் தாய் இறந்துவிட்ட நிலையில், அந்த குடும்பத்தில் இருக்கும் 21 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

விவாகரத்து பெற்று தனியாக வாழும் பெண்களும், ரேஷன் கார்டு வைத்திருந்தால் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் வழிகாட்டுதல்களை தமிழக அரசு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More : நீட் Moral ஊழல்.. அதிமுகவினருக்கு எஜமானர்களிடம் பேச நேரமோ, மானமோ இல்லை ! CM ஸ்டாலின் விமர்சனம்..

RUPA

Next Post

பெங்களூருவில் பட்டப்பகலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. 5 பேர் கும்பல் அட்டூழியம்.. அதிர்ச்சி வீடியோ..

Mon Jun 23 , 2025
பெங்களூரு அருகே பட்டப்பகலில் ஒரு பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. பெங்களூருவிலிருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் உள்ள மைலசந்திரா அருகே உள்ள ரேணுகா யெல்லம்மா லேஅவுட்டில் நேற்று மாலை 4 மணியளவில் அந்தப் பெண் மளிகைப் பொருட்கள் வாங்க வெளியே சென்றபோது, ​​5 பேர் கொண்ட ஒரு கும்பல் அவரைத் தடுத்தது. சில ஆண்கள் […]
woman molested by group of drunk men in bengaluru neighbours also attacked accused files counter c 235201889

You May Like