தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.680 குறைந்து, ரூ.72,560க்கு விற்பனையாகிறது..
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா காலக்கட்டத்தில் உலக பொருளாதாரமே முற்றிலும் மாறியது.
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது. அதன்பின்னர் ஏற்ற இறக்கமாகவே தங்கம் விலை காணப்படுகிறது. ஜூன் மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை உயர்ந்து கொண்டே தான் வருகிறது.. இதில் ஓரிரு நாட்கள் மட்டும் தங்கம் விலையில் சரிவு காணப்பட்டது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் ஒரு சவரனுக்கு ரூ.600 குறைந்து, ரூ.73,240க்கு விற்பனையானது.
இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது.. அதன்படி 22 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.9,070க்கு விற்கப்படுகிறது. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.680 குறைந்து, ரூ.72,560க்கு விற்பனையானது.
அதே போல் இன்று வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.1 குறைந்து ரூ.119க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,19,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் சாமானிய மக்களும் நகைப்பிரியர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..
Read More : புது அப்டேட்… இவர்களும் மாதம் 1000 ரூபாய் பெறும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்…! தமிழக அரசு