வெடிகுண்டு மிரட்டல்.. ஏர் இந்தியா விமான விபத்து உடன் தொடர்பு.. ஒருதலை காதலனை பழிவாங்க பிளான் போட்ட சென்னை பெண்.. எப்படி சிக்கினார்?

AA1HomeX

சென்னையைச் சேர்ந்த 30 வயது ரோபாட்டிக்ஸ் என்ஜினியர் ஒருவர், 11 மாநிலங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட ரெனே ஜோஷ்லிடா என்ற பெண் பல போலி இமெயில் ஐடிகளை உருவாக்கி, பல மாதங்களாக ரகசியமாக இருக்க VPNகள் மற்றும் டார்க் வெப்களைப் பயன்படுத்தியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


தனது முன்னாள் சக ஊழியர் ஒருவரை சிக்க வைப்பதற்காக அவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகவும் போலீசார் கூறியுள்ளனர்.. ரெனே ஜோஷில்டா 21 வெவ்வேறு இடங்களில் உள்ள பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் மைதானங்களை குறிவைத்து போலி மின்னஞ்சல்களை அனுப்பி உள்ளார். இது போதாதென்று ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விபத்துக்கு நான் தான் காரணம் என்று கூறி அவர் மெயில் அனுப்பி உள்ளார். ஆனால் ஒரே ஒரு டிஜிட்டல் பிழையால் அவர் சிக்கியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஒருதலை காதல் கதை

ரெனே ஜோஷில்டா ரோபாட்டிக்ஸ் பயிற்சி பெற்ற என்ஜினியர் ஆவார். அவர் 2022 முதல் சென்னையில் உள்ள Deloitte நிறுவனத்தில் மூத்த ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார். ஒரு பிராஜக்ட் சம்மந்தமாக பெங்களூரு சென்ற போது அங்கு ஜோஷில்டா திவிஜ் பிரபாகரை சந்தித்துள்ளார். ஒருகட்டத்தில் அவரை தொடங்கி உள்ளார். ஆனால் திவிஜ்-க்கு ரெனே மீது காதல் ஏற்படவில்லை.. ஒருதலையாக காதலித்து வந்த ரெனேவின் காதலை திவிஜ் ஏற்கவில்லை. கடந்த பிப்ரவரி மாதம் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

நிராகரிப்பால் கோபமடைந்த ரெனே, ஒரு பழிவாங்கும் திட்டத்தை வகுத்ததாகக் கூறப்படுகிறது. திவிஜ் பிரபாகரின் பெயரை பயன்படுத்தி பல போலி மின்னஞ்சல் கணக்குகளை உருவாக்கி, அவரை சிக்க வைக்கும் முயற்சியில் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் பொது இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்களை அனுப்ப தொடங்கினார் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது..

இதுகுறித்து போலீசார் பேசிய போது “அவர்கள் ஒன்றாக வேலை செய்யும் போது, ​​அவர் போலி மின்னஞ்சல் கணக்குகளை உருவாக்கி, தனது ரகசிய காதலன் மீது ஆர்வம் காட்டிய மற்ற பெண்களுக்கும் அவர் தொந்தரவு கொடுத்துள்ளார்.. பெண் சக ஊழியர் தனது காதலன் மீது ஆர்வமாக இருப்பதாக சந்தேகித்து துன்புறுத்தினார், அதனால் அந்த பெண் தனது வேலையை விட்டு விலகினார்,” என்று தெரிவித்தனர்.

ஏர் இந்தியா விமான விபத்துக்கு பொறுப்பேற்றார்

ஜூன் 12 அன்று நடந்த துரதிர்ஷ்டவசமான ஏர் இந்தியா விமான விபத்தில் பணியாளர்கள், பயணிகள் மற்றும் தரையில் இருந்த பொதுமக்கள் உட்பட குறைந்தது 274 பேர் கொல்லப்பட்டனர். ஜோஷில்டா இந்த விபத்துக்கு போலியாக பொறுப்பேற்றார் என்றும் தெரிவித்துள்ளனர்.

“உங்களுக்கு இப்போது பவர் என்றால் என்ன என்று தெரியும் என்று நினைக்கிறேன். நேற்று உங்களுக்கு மெயில் அனுப்பியது போல, நாங்கள் எங்கள் முன்னாள் முதல்வர் (விஜய் ரூபானி) உடன் ஏர் இந்தியா விமானத்தை மோதி விபத்துக்குள்ளாக்கினோம். விமான விபத்து ஒரு மோசடி என்று போலீசார் நினைத்து அதைப் புறக்கணித்திருப்பார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். எங்கள் விமானிக்கு வாழ்த்துக்கள். இப்போது நாங்கள் விளையாடவில்லை என்பது உங்களுக்குத் தெரியும். இப்போது உங்களுக்குத் தெரியும்.” என்று கூறி பிஜே மருத்துவக் கல்லூரி நிர்வாகத்திற்கு ஒரு போலி மின்னஞ்சல் அனுப்பினார்.

ரெனே, தனது தொழில்நுட்ப அறிவு மற்றும் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, போலி மின்னஞ்சல் ஐடிகள் மற்றும் VPNகளை பயன்படுத்தி போலி வெடிகுண்டு மிரட்டல்களை அனுப்பினார். அகமதாபாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள 21 இடங்களை வெடிக்கச் செய்வதாக அவர் மிரட்டினார். இவற்றில் மோட்டேராவில் உள்ள நரேந்திர மோடி மைதானம், சர்கேஜ் நகரில் உள்ள ஜெனீவா லிபரல் பள்ளி மற்றும் ஒரு சிவில் மருத்துவமனை ஆகியவை அடங்கும்.

ஜோஷில்டா குஜராத்திற்கு மட்டும் போலி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கவில்லை. அவர் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தமிழ்நாடு, டெல்லி, கர்நாடகா, கேரளா, பீகார், தெலுங்கானா, பஞ்சாப், மத்தியப் பிரதேசம் மற்றும் ஹரியானா உள்ளிட்ட 11 மாநிலங்களுக்கு மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பினார் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.

ரெனே ஜோஷில்டா எப்படி கைது செய்யப்பட்டார்?

கடந்த இரண்டு ஆண்டுகளில் ஜோஷில்டா VPN மூலம் குறைந்தது 80 எண்களை வாங்கி நூற்றுக்கணக்கான போலி மின்னஞ்சல்களை அனுப்பியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும். “அவர் மின்னஞ்சல் ஐடிகளை உருவாக்க பயன்படுத்தும் எண் மெய்நிகர் ஆகும். அவர் Tor browser, டார்க் வெப் மூலம் மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பினார். அவர் நிறைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தார். அவர் மிகவும் புத்திசாலி. மேலும் அவரது டிஜிட்டல் தடத்தை ஒருபோதும் வெளிப்படுத்தவில்லை. ஆனால் அவர் ஒரு சிறிய தவறு செய்தார், எங்கள் சைபர் கிரைம் பிரிவு மற்றும் குற்றப் பிரிவு அவரைக் கண்டுபிடித்தது.

டார்க் வெப் மற்றும் VPNகளைப் பயன்படுத்தி தனது அடையாளத்தையும் இருப்பிடத்தையும் மறைக்க முடிந்தது. ஆனால் ஜோஷில்டா ஒரு முறை அதே சாதனத்திலிருந்து தனது உண்மையான மற்றும் போலி மின்னஞ்சல் கணக்குகளில் உள்நுழைந்தார். இது அவரது ஐபி முகவரியைக் கண்டறிய போலீசாருக்கு உதவியது. அந்த ஒரு கவனக்குறைவான உள்நுழைவு அவரை காட்டிக்கொடுத்தது” என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.

Read More : ரூ.4 கோடி சொத்துப் பத்திரத்தை கோயில் உண்டியலில் போட்ட ராணுவ வீரர்.. என்ன காரணம்?

RUPA

Next Post

குடும்ப வன்முறை குறித்து புகார் அளிக்க திருநங்கைகளுக்கும் உரிமை உண்டு!. உயர்நீதிமன்றம் அதிரடி!

Thu Jun 26 , 2025
திருமணம் செய்து கொண்ட திருநங்கைக்கு குடும்ப வன்முறை புகார் அளிக்க உரிமை உண்டு என்று ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 498A இன் கீழ், ஒரு பெண் தனது கணவர் அல்லது கணவரின் உறவினர்களால் வன்முறைக்கு ஆளானால் புகார் அளிக்க உரிமை உண்டு என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருநங்கைகளுக்கு அத்தகைய பாதுகாப்பு பொருந்தாது என்ற வாதத்தை நீதிபதி வெங்கட ஜோதிர்மயி பிரதாபா […]
transgender andhra court 11zon

You May Like