என் மூச்சிருக்கும் வரை நான் தான் பாமக தலைவர் என்று ராமதாஸ் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பாமக தலைமை பொறுப்பு தொடர்பாக ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த நிலையில், அன்புமணியுடன் கருத்து வேறுபாடு விவகாரத்தில் இன்னும் முடிவு வரவில்லை என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் “ சமரசம் பேசுகிறோம்.. பேசிக்கொண்டே இருக்கிறோம்.. எல்லா பிரச்சனைக்கும் முடிவு உள்ளது. ஆனால் இந்த விஷயத்தில் அந்த முடிவு இன்னும் வரவில்லை.. அன்புமணி மன்னிப்பு கேட்கிறாரா இல்லையா என்பது பிரச்சனை இல்லை.. பாமகவை வளர்த்தது நான் தான்.. என் மூச்சிருக்கும் வரை நான் தான் பாமக தலைவர்.. அவர் செயல் தலைவர். இது மறைந்த தலைவர் கலைஞரின் பாணி.. மு.க ஸ்டாலின் இருந்தது போல் அன்புமணி செயல்தலைவராக இருக்க வேண்டும்..
கட்சி நிர்வாகிகளை நியமிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் “ ஆதிகாலத்தில் இருந்து கட்சியில் உழைத்து ஒதுக்கப்பட்டவர்களுக்கு நான் பொறுப்புகளை கொடுத்திருக்கிறேன்..” என்று தெரிவித்தார்.
முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியா, அண்ணாவை கொச்சைப்படுத்தியது குறித்த கேள்விக்கு பதிலளித்த ராமதாஸ், அண்ணா, பெரியாரை கொச்சைப்படுத்தியது வருந்தத்தக்கது. தமிழ்நாட்டிற்கு தொண்டு செய்த, தமிழ்நாட்டு மக்களின் உள்ளங்களில் வாழ்ந்து வரும் மறைந்த தலைவர்களை யாராக இருந்தாலும் கொச்சைப்படுத்தக் கூடாது. கொள்கை, கருத்துகளில் முரண்பாடுகள் இருந்தாலும் மறைந்த தலைவர்கள் யாரையும் நாம் கொச்சைப்படுத்தக் கூடாது. அனைத்து அரசியல் கட்சிகளுக்கு என் வேண்டுகோள் இது..” என்று கூறினார்.
Read More : 20 தொகுதிகள் ஒதுக்க தயார்.. விசிக தேர்தல் செலவை அதிமுக ஏற்கும்..!! – திருமாவளவனுக்கு தூது விட்ட இபிஎஸ்