இவர்களின் போலி பக்தி, அரசியல் நாடகத்தை யாரும் ஏற்கமாட்டார்கள்.. பாஜக – அதிமுகவை விளாசிய ஸ்டாலின்..

1357850

அதிமுக – பாஜக கூட்டணியின் போலி பக்தியையும் அரசியல் நாடகத்தையும் யாரும் இங்கு ஏற்க மாட்டார்கள் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூரில் அரசு சார்பில் நடைபெற்ற நலத்திட்ட விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது “ கடந்த கால ஆட்சியாளர்களால் சீரழிந்த நாட்டை வரலாறு காணாத வளர்ச்சிக்கு கொண்டு சென்றுள்ளோம்.. ஓரவஞ்சனை செய்யும் மத்திய அரசால் கூட நமது வளர்ச்சியை தடுக்க முடியவில்லை..


பாஜகவும், அதிமுகவும் மக்களை பற்றி கவலைப்படாமல் மதத்தை பற்றி கவலைப்படுகின்றனர்.. தமிழ்நாட்டில் மதத்திற்கு ஆபத்து என்று அதிமுகவை வைத்துக்கொண்டே பாஜக பேசுகிறது. ஆனால் தற்போது பாஜக – அதிமுக கூட்டணிக்கு தான் தற்போது ஆபத்து.. அரசியல் லாபத்திற்காக தற்போது கடவுள் பெயரை தவறாக பயன்படுத்தி வருகின்றனர். இவர்களின் போலி பக்தியையும் அரசியல் நாடகத்தையும் யாரும் இங்கு ஏற்க மாட்டார்கள்.. இது தமிழ்நாடு.. பெரியார் உருவாக்கி மண்.. அண்ணா வளர்த்த மண், கலைஞர் மீட்ட மண். அனைத்து மதத்தினரும் நல்லிணக்கத்தோடு வாழும் மண் இது..

கடந்த 4 ஆண்டுகளில் 3000 கோயில்களை புனரமைத்துள்ளோம்.. ரூ.84 கோடி மதிப்பீட்டில் தேவாலயங்கள், மசூதிகளை புனரமைத்துள்ளோம்.. இது தான் திராவிட மாடல். இதை எல்லாம் பார்த்து தான் மதவாத அரசியல் செய்வோருக்கு பத்திக்கிட்டு எரியுது.. அவர்களால் தமிழ்நாட்டிற்கு செய்த வளர்ச்சி பற்றி பேசி ஓட்டு கேட்க முடியவில்லை..

அதனால் தான் இப்போது மதத்தை வைத்து அரசியல் செய்யலாம் என்று பார்த்தால், அங்கேயும் திமுக ஸ்கோர் பண்ணிட்டாங்களே என்று பார்க்கின்றனர்.. ஏதாவது ஒரு குழப்பத்தை ஏற்படுத்த படாத பாடு படுகின்றனர். மீண்டும் சொல்கின்றேன்.. இது பெரியார், அண்ணா, கலைஞரால் வளர்க்கப்பட்ட மண்.. இப்படிப்பட்ட தலைவர்களை நீங்கள் கொச்சைப்படுத்தி வீடியோ போடுகிறீர்கள்.. அதை கைதட்டி வேடிக்கை பார்ப்பது அண்ணா பெயரில் கட்சி நடத்தும் கூட்டம்.. அண்ணா பெயரையே அவர்கள் அடமானம் வைத்து விட்டனர். இன்றைக்கு கட்சியை அடமானம் வைத்தவர்கள் நாளை தமிழ்நாட்டை அடமானம் வைக்க நாம் அனுமதிக்க கூடாது..

தமிழ்நாடுக்கும், தமிழினத்திற்கும் துரோகம் செய்யக்கூடிய ஒருசேர பாடம் புகட்ட வேண்டும்.. உங்களுக்கு அரணாக எப்போதும் திமுக இருக்கும்.. நீங்களும் எப்போதும் எங்களுக்கு துணையாக இருக்க வேண்டும்.” என்று தெரிவித்தார்.

Read More : திமுக-வினருக்கு பதவி வெறி தலைக்கேறிவிட்டதா..? அதிமுக நிர்வாகி படுகொலைக்கு EPS கண்டனம்..!!

RUPA

Next Post

பஹல்காம் தாக்குதலை புறக்கணித்த SCO கூட்டறிக்கையில் இந்தியா கையெழுத்திட மறுப்பு..!!

Thu Jun 26 , 2025
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதல் பற்றி எதுவும் இல்லாததால், கூட்டறிக்கையில் கையெழுத்திட இந்தியா மறுப்பு. சீனாவின் கிங்டாவோ நகரில் நடைபெற்ற SCO (Shanghai Cooperation Organisation) பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து எந்தவொரு குறிப்பும் இல்லாததை தொடர்ந்து, இந்தியா கூட்டறிக்கையில் கையெழுத்திட மறுத்துள்ளது. இந்த மாநாட்டில், இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இந்திய பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் […]
sco 2

You May Like