“மொழி என்பது வெறும் தகவல் பரிமாற்ற சாதனமல்ல; அது ஒரு நாட்டின் ஆன்மா என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும், அலுவல் மொழித்துறையின் பொன்விழா கொண்டாட்டத்தில் அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, “எந்தவொரு வெளிநாட்டு மொழிகளுக்கு எதிர்ப்பு இல்லை. ஆனால், நமது நோக்கம் என்னவென்றால் நமது சொந்த மொழிகளில் சிந்திக்கவும், உரையாடவும், பெருமைப்படுத்தவும் வேண்டும் என்பதே என்று கூறினார்.
“இந்திய மொழிகள் மாநில அரசுகளிலும், மத்திய அரசு அலுவலகங்களிலும் நிர்வாக மொழியாக பயன்பட வேண்டும்.” “இந்தி மொழி எந்த இந்திய மொழிக்கும் எதிரியானதல்ல; இந்தியாவின் அனைத்து மொழிகளுடனும் இந்தி ஒரு நண்பனாக இருக்கிறது.” “தொழில்நுட்பக் கல்வி தற்போது 12 இந்திய மொழிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேச அரசு, இந்தியில் மருத்துவக் கல்வியைத் தொடங்கியுள்ளது.”“எல்லா மாநிலங்களும் தங்களது மாநில மொழிகளில் மருத்துவ மற்றும் பொறியியல் கல்வியை வழங்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று அமித்ஷா வலியுறுத்தியுள்ளார்.
“இந்த ஆண்டு தொடங்கப்பட்டுள்ள ‘பாரதீய பாஷா அனுபாக்’ (Bharatiya Bhasha Anubhag) மூலமாக, இந்திய மொழிகளை இளைஞர்கள் மற்றும் பள்ளி-கல்லூரி மாணவர்களின் மொழியாக மாற்றுவோம் என்றும் கடந்த சில தசாப்தங்களாக, இந்தியாவை உடைக்க மொழி ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டது, ஆனால் இந்த முயற்சி வெற்றிபெறவில்லை என்றும் அவர் கூறினார். “நமது மொழிகள் இந்தியாவை ஒருமைப்பாட்டுடன் இணைக்கும் ஒரு சக்திவாய்ந்த ஊடகமாக மாற வேண்டும். பிரிக்கக்கூடியதாய் அல்ல,” என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மேலும், “மொழி என்பது வெறும் தகவல் பரிமாற்ற சாதனமல்ல; அது ஒரு நாட்டின் ஆன்மா என்றும் “நமது சொந்த மொழிகள் இல்லாமல் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை ஊக்குவிக்க முடியாது. அவற்றை உயிர்ப்புடன், வளமாக வைத்திருப்பது முக்கியம்,” என்று அவர் கூறினார்.
“பாஷா சங்கம் (Bhasha Sangam) முயற்சியின் ஒரு பகுதியாக, நாட்டின் அனைத்து பள்ளிகளிலும், மாணவர்களுக்கு இந்திய அரசியலமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் 100 வசனங்களை கற்பிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.””தொழில்மொழித் துறை (Department of Official Language) ‘ஹிந்தி ஷப்த்சிந்து’ (Hindi Shabdsindhu) எனும் ஒரு முக்கிய முயற்சியை உருவாக்கியுள்ளது. இது ஹிந்தி மொழியை அரசு மொழியாக ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கும், அதை வசதியானதாக்கவும், விரிவாக்குவதற்கும் பயனளிக்கிறது.”
“எந்த ஒரு மொழியையும் வளர்த்தெழுப்புவதில் தயக்கம் இருக்கக்கூடாது. பொதுவாக பேசப்படும் சொற்கள், அவை எந்த மொழியில் தோன்றியவையாயினும், ‘ஹிந்தி ஷப்த்சிந்து’யில் சேர்க்கப்பட்டவுடன், எதிர்காலத்தில் அவை ஹிந்தி சொற்களாகவே கருதப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
Readmore: தூள்..! தமிழகம் முழுவதும் இன்று ஒரு நாள் மட்டும் தான்… பத்திரப் பதிவுத்துறை அதிரடி உத்தரவு…!