ஜூலையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்.. 12% வரி அடுக்கு நீக்க வாய்ப்பு.. எந்தெந்த பொருட்களின் விலை குறையும்..?

GST Council meeting 1

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஆறு மாதங்களுக்குப் பிறகு ஜூலை முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் முக்கிய வரி விகித மாற்றங்கள் குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக 12% ஜிஎஸ்டி வரி அடுக்கை நீக்குவது அல்லது குறைப்பது தொடர்பான விவாதம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி, வருமான வரி மற்றும் சுங்கத் துறைகளின் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். வரி செலுத்துவோர் சேவைகளை மேம்படுத்தல், நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்கும் வழிகள், பணத்தைத் திருப்பி பெறும் நடைமுறையின் தாமதத்தை தவிர்த்தல், வணிக வசதி மேம்பாடு, ஜிஎஸ்டி குறைபாடுகள் குறித்து மதிப்பீடு போன்றவை இக்கூட்டங்களில் விவாதிக்கப்பட உள்ளவை.

ஜிஎஸ்டி வரி விகிதங்களை முறைப்படுத்துவது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் தனது அடுத்த கூட்டத்தில் விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதுள்ள நான்கு அடுக்கு ஜிஎஸ்டி முறையை மூன்று அடுக்குகளாக குறைக்கும் வகையில், 12% வரி விதிப்பை நீக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் பொது மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களை 5% வரி விதிப்பு அடுக்குக்கு மாற்றவும், மற்ற பொருட்களை 18% வரி விதிப்பு அடுக்குக்கு மாற்றவும் வாய்ப்புள்ளது.

ஜிஎஸ்டி விகித முறைமை பரிசீலனையில் உள்ள அமைச்சர்கள் குழுவிற்கு ஆலோசனை வழங்கும் அதிகாரிகள், நிபுணர்கள் ஆகியோரிடையே, 12% அடுக்கை நீக்கலாம் என்ற கருத்து ஒருமித்தமாக உருவாகியுள்ளது. பெரும்பாலான மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள், நிபுணர்கள் மற்றும் அமைச்சர்கள் குழு பிரதிநிதிகள் 12% வரி விதிப்பு அடுக்கை நீக்குவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தற்போது, இந்தியாவில் நான்கு அடுக்கு ஜிஎஸ்டி அமைப்பு உள்ளது – 5%, 12%, 18% மற்றும் 28%. அத்தியாவசியப் பொருட்களுக்குக் குறைவான வரியும், ஆடம்பரப் பொருட்களுக்கு அதிக வரியும் விதிப்பது இதன் முக்கிய கொள்கையாகும். ஏழைகள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களான unpack செய்யப்பட்ட உணவுப் பொருட்கள், உப்பு, பால், புதிய காய்கறிகள், கல்வி மற்றும் சுகாதார சேவைகள் போன்றவற்றுக்கு பூஜ்ஜிய வரி விதிக்கப்படுகிறது.

எதற்கெல்லாம்12 சதவீத வரி விதிப்பு?

12% வரி விதிப்பு அடுக்கில், கெட்டியான பால், மீன் முட்டைகளிலிருந்து தயாரிக்கப்படும் Caviar மற்றும் Caviar Substitutes, 20 லிட்டர் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீர், வாக்கி டாக்கி, டாங்கிகள் மற்றும் பிற கவச வாகனங்கள், காண்டாக்ட் லென்ஸ்கள், சீஸ், பேரீச்சம்பழம் மற்றும் உலர் பழங்கள், உறைந்த காய்கறிகள், Sausages மற்றும் அதுபோன்ற இறைச்சி பொருட்கள், பாஸ்தா, ஜாம் மற்றும் ஜெல்லி, பழச்சாறு கலந்த பானங்கள், Namkeens, கறி பேஸ்ட், Mayonnaise,

டூத் பவுடர், ஃபீடிங் பாட்டில்கள், தரைவிரிப்புகள், குடைகள், தொப்பிகள், சைக்கிள்கள், குறிப்பிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள், பிரம்பு அல்லது மரத்தால் செய்யப்பட்ட அமைப்புகள், பென்சில்கள் மற்றும் கிரேயான்கள், சாக்கு மற்றும் பருத்தியால் செய்யப்பட்ட கைப்பை மற்றும் ஷாப்பிங் பேக், ரூ.1,000 க்கும் குறைவான காலணிகள், Diagnostic Kits, மற்றும் மார்பில் மற்றும் கிரானைட் ஆகியவை அடங்கும்.

12% ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் சேவைகளில், குறிப்பிட்ட கட்டுமானப் பணிகள், ஒரு நாளைக்கு ரூ.7,500 வரை உள்ள ஹோட்டல் அறைகள், விமானம் மூலம் பயணிகள் செய்யும் போக்குவரத்து (Economy வகுப்பைத் தவிர), சில வகையான Multimodal போக்குவரத்து, மற்றும் குறிப்பிட்ட Professional, Technical மற்றும் Business சேவைகள் ஆகியவை அடங்கும்.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, சிறு மற்றும் குறுந்தொழில் துறையினர் இந்த முடிவுகளுக்காக காத்திருக்கின்றனர். இது இந்தியாவின் வரி நிர்வாக வரலாற்றில் ஒரு புதிய திருப்பமாக மாறுமா என்பதை ஜூலை கூட்டம் தீர்மானிக்கும்.

Read more: நாடு முழுவதும் 345 அரசியல் கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்க தேர்தல் ஆணையம் முடிவு…!

Next Post

தாயும், மகளும் ஒரே நபருடன் கள்ளக்காதல்!. தேனிலவு கொலை போல தெலுங்கானாவில் பயங்கரம்!. ஐஸ்வர்யாவின் பகீர் பின்னணி!

Fri Jun 27 , 2025
மேகாலயாவிற்கு தேனிலவுக்கு சென்ற ராஜா ரகுவன்ஷி என்பவரை அவரது மனைவி சோனம் கொலை செய்த சம்பவத்தை போன்று தெலுங்கானாவிலும் மற்றொரு பயங்கர திட்டமிட்ட கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருமணமாகி ஒரே மாதத்தில் தேதேஸ்வர் என்ற இளைஞரை அவரது மனைவி ஐஸ்வர்யா தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்த பின்னணி குறித்து பார்க்கலாம். தெலுங்கானா மாநிலம் ஜோகுலம்பா கட்வால் மாவட்டத்தை சேர்ந்தவர் தேஜஸ்வர் (வயது 32) தனியார் […]
Telangana murder 11zon

You May Like