பிரபல தெலுங்கு செய்தி தொகுப்பாளினி தூக்கிட்டு தற்கொலை..

MALENADUTODAY.COM 43 1024x576 1

பிரபல தெலுங்கு சேனலின் செய்தி தொகுப்பாளினியும், 40 வயது பத்திரிகையாளருமான ஸ்வேத்சா தூக்கிட்டு தற்கொலை கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தனது வீட்டில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் அவர் காணப்பட்டார்.


ஸ்வேட்சாவின் மகள் மாலையில் பள்ளியிலிருந்து வீடு திரும்பியபோது படுக்கையறை கதவு பூட்டப்பட்டிருப்பதை கண்டுள்ளார்.. பலமுறை தட்டியும் கதவு திறக்கப்படாததால் அவரின் அண்டை வீட்டாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்உ விரைந்த போலீசார் ஸ்வெட்சாவி உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

இது தற்கொலையாக இருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன”. ஸ்வேட்சாவின் தாயார் மற்றும் பள்ளி மாணவியான இளம் மகளுடன் ஒரு குடியிருப்பு அடுக்குமாடி கட்டிடத்தின் பென்ட்ஹவுஸில் வசித்து வந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஸ்வேட்சாவின் குடும்பத்தினர் அளித்த புகாரைத் தொடர்ந்து தற்கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் மேலும் தெரிவித்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அவர்கள் கூறினர்.

செய்தி தொகுப்பாளரின் மறைவுக்கு பிஆர்எஸ் செயல் தலைவர் கே.டி. ராமராவ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ஒரு தீவிர பத்திரிகையாளர், எழுத்தாளர் மற்றும் அர்ப்பணிப்புள்ள தெலுங்கானாவைச் சேர்ந்த ஸ்வேத்சா வோடர்கரின் துரதிர்ஷ்டவசமான மறைவு குறித்து கேள்விப்பட்டு மிகவும் வருத்தமடைந்தேன். எனக்கு வார்த்தைகள் தெரியவில்லை. இதைப் படிக்கும் அனைவருக்கும் – வாழ்க்கை கடினமானது என்று நீங்கள் எப்போதாவது உணர்ந்தால், தயவுசெய்து ஒரு நிபுணரை அணுக தயங்காதீர்கள். வாழ்க்கை வாழ வேண்டியதே, எப்போதும் ஆதரவு கிடைக்கும்,” என்று ராமராவ் குறிப்பிட்டுள்ளார்.

Read More : இனி புதிய இரு சக்கர வாகனம் வாங்கினால் 2 ஹெல்மெட் கிடைக்கும்.. மத்திய அரசு முக்கிய முடிவு..

RUPA

Next Post

நடுவானில் 7 பேருக்கு உடல்நல பிரச்சனை.. மும்பை சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கம்..

Sat Jun 28 , 2025
An Ethiopian Airlines flight bound for Mumbai reportedly made an emergency landing after 7 people fell ill mid-air.
Ethiopian airlines 1751099121689 1751099134321

You May Like