பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரையில் கூட்ட நெரிசல்.. 3 பேர் பலி..!! பலர் காயம்..

ratha yathra 1

பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்,


ஒடிஸாவில் உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை கோலாகலமாக நடைபெற்றுவரும் நிலையில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பிரதான கோயிலில் இருந்து 2.6 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீகுந்திச்சா கோயிலுக்கு ரதங்கள் இழுத்துச் செல்லப்பட்டு, அங்கு 9 நாட்கள் வழிபாட்டுக்குப் பிறகு ரதங்கள் மீண்டும் ஜெகந்நாதா் ஆலயத்துக்குத் திரும்பும்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் பிரேமகாந்த மொஹந்தி (80), பசந்தி சாஹூ (36) மற்றும் பிரபாதி தாஸ் (42) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பூரி மாவட்ட தலைமையக மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டபோது உயிரிழந்தனர்.

இன்று அதிகாலை 4 முதல் 5 மணிக்குள், பூரண தரிசனம் காண ஏராளமான பக்தர்கள் திரண்ட நிலையில் கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதில் மரக்கட்டைகள் ஏற்றிச் சென்ற இரண்டு லாரிகள் நெரிசலான பகுதியில் நுழைந்ததால் நிலைமை மேலும் மோசமானது. சம்பவம் குறித்து ஒடிசா மாநில சட்டத்துறை அமைச்சர் பிருதிவிராஜ் ஹரிசந்தன் கூறுகையில், “மூன்று உயிரிழப்புகள் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளன. இதற்கான முழுமையான விசாரணை நடத்தப்படும். தவறுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என உறுதி அளித்தார்.

Read more: செம வாய்ப்பு…! இந்திய ரயில்வேயில் 6,180 காலி பணியிடங்கள்…! விண்ணப்பிக்க தகுதி…‌!

Next Post

மகிழ்ச்சி செய்தி...! தலைமை ஆசிரியர் பதவி உயர்வு... இவர்களுக்கும் 4% இட ஒதுக்கீடு...!

Sun Jun 29 , 2025
மாற்றுத்திறனாளிகளுக்கான பதவி உயர்வில் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியான முதுநிலை ஆசிரியர்கள், உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பட்டியல் கோரப்பட்டு அதற்கான கருத்துருக்கள் பெறப்பட்டன. அதன் அடிப்படையில் தகுதியுள்ள ஆசிரியர்களின் உத்தேச பெயர்ப் பட்டியல் […]
Tn Govt 2025

You May Like