#Flash : போராட்டத்தை தள்ளி வைங்க.. தவெக-வுக்கு ஹைகோர்ட் அறிவுறுத்தல்.. அவசர வழக்காக விசாரிக்கவும் மறுப்பு..

FotoJet 9 1

இளைஞர் அஜித்குமார் மரண வழக்கு தொடர்பான போராட்டத்தை தள்ளி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் தவெகவுக்கு அறிவுறுத்தி உள்ளது.

திருப்புவனம் அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டும், 24 பேர் காவல் நிலையத்தில் மரணம் அடைந்தது குறித்து உயர்நீதிமன்றமே அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், இது குறித்து தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தியும் தவெக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த போராட்டத்திற்கு இரண்டு முறை அனுமதி கேட்டும் காவல்துறை அனுமதி வழங்கவில்லை என்று தவெக கூறியது.


எனவே வரும் 6-ம் தேதி அஜித்குமார் மரண வழக்கில் தவெக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி தவெக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இளைஞர் அஜித்குமார் மரண வழக்கு தொடர்பான ஆர்ப்பாட்டத்தை தள்ளி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் தவெகவுக்கு அறிவுறுத்தி உள்ளது.. மேலும் அவசர வழக்காக விசாரிக்க என்ன அவசரம் என்று கேள்வி எழுப்பிய நீதிபதி தவெகவின் முறையீட்டயும் அவர் நிராகரித்தார். மேலும் மனு எண்ணிடப்பட்டு வந்தால் திங்கள்கிழமை விசாரிப்பதாகவும் நீதிபதி தெரிவித்தார்.

RUPA

Next Post

COVID-19 தடுப்பூசிகளுக்கும் திடீர் மரணங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை..!! - Serum Institute விளக்கம்

Fri Jul 4 , 2025
கோவிட்-19 தடுப்பூசியான கோவிஷீல்ட் பாதுகாப்பானது என்றும், அறிவியல் பூர்வமாக சரிபார்க்கப்பட்டுள்ளது என்றும் Serum Institute of India தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் ஹாசன் மாவட்டத்தில் ஒரே மாதத்தில் 20க்கும் மேற்பட்டோர் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக அம்மாநில முதல்வர் சித்தராமையா, ‘கொரோனா தடுப்பூசியின் தாக்கத்தால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம்’ என்ற சந்தேகத்தை எழுப்பி இருந்தார். இந்நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் தேசிய […]
covid 19 vaccine 11zon

You May Like