அமெரிக்காவில் Anixa Biosciences மற்றும் Cleveland Clinic இணைந்து உருவாக்கிய புதிய தடுப்பூசி, மிகவும் ஆபத்தான மார்பக புற்றுநோயான Triple-Negative Breast Cancer (TNBC)-ஐ தடுப்பதற்கான முதல் கட்ட மருத்துவ சோதனை குறிப்பிடத்தக்க நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட புதிய தடுப்பூசி மார்பக புற்றுநோயை தடுக்கவும் மற்றும் சிகிச்சையளிக்கவும் நோக்கமாக உருவாக்கப்பட்டுள்ளது. இது தனது முதல் கட்ட மருத்துவ சோதனையை சமீபத்தில் முடித்துள்ளது, அதாவது, இந்த தடுப்பூசியின் முதல் கட்ட மருத்துவ சோதனையில், பங்கேற்ற பெண்களில் 75% க்கும் அதிகமானோருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை (strong immune response) உருவாக்கியுள்ளது. இது பெண்களுக்கு மிகவும் பொதுவான மற்றும் கொடிய புற்றுநோய்களில் ஒன்றான மார்பகப் புற்றுநோயை விரைவில் தடுக்க முடியும் என்ற நம்பிக்கையை எழுப்பியுள்ளது.
Anixa Biosciences மற்றும் Cleveland Clinic இணைந்து நடத்தியுள்ள இந்த புதிய தடுப்பூசி சோதனை, **புற்றுநோய் எதிர்ப்பு சிகிச்சையில் (cancer immunotherapy) ஒரு பெரிய மைல்கல்லாக (milestone) கருதப்படுகிறது. இந்த புதிய மார்பக புற்றுநோய் தடுப்பூசி, அதன் முதல் கட்ட மருத்துவ சோதனையில் 35 பெண்களில் சோதிக்கப்பட்டது. அவர்கள் பெரும்பாலும் TNBC எனப்படும், மிகவும் ஆபத்தான மற்றும் சிகிச்சைக்கு கடினமான புற்றுநோய் வகையில் பாதிக்கப்பட்டவர்கள்.
இந்த வகை மார்பக புற்றுநோய் மற்றும் அதன் மூல காரணியாக கருதப்படும் மரபணு மாற்றம் உலக அளவில் கவனத்திற்கு வந்தது, நடிகை அஞ்சலினா ஜோலியின் சோதனை முடிவுகளுக்குப் பிறகுதான். அதாவது 2013ஆம் ஆண்டில், நடிகை அஞ்சலினா ஜோலி, தனது உடலில் BRCA1 என்ற மரபணு மாற்றம் இருப்பதை கண்டறிந்தார்.
இந்த BRCA1 mutation, (TNBC) உள்பட பல வகை மார்பக புற்றுநோய்களுக்கு காரணமாக இருக்கலாம். இதையடுத்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி, அவரது 37வயதில் மார்பகங்களை முற்றிலுமாக அகற்றும் முடிவை எடுத்தார்.
இந்த முடிவு உலகளவில் விழிப்புணர்வை உருவாக்கியது. பெண்கள் தங்களது குடும்ப வரலாறு மற்றும் மரபணு சோதனையை பரிசீலிக்கத் தொடங்கினர். “Jolie Effect” என்று பெயரிடப்பட்ட இதன் விளைவாக, BRCA சோதனைக்கு பெண்கள் செல்வது கணிசமாக அதிகரித்தது.
அதாவது, சோதனையின்போது பங்கேற்ற பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதுடன், வரையறுக்கப்பட்ட இடைவெளிகளில் அவர்களின் இரத்தம் எடுத்துச் சோதிக்கப்பட்டது. அப்போது, குறிப்பாக, பாலூட்டலில் ஈடுபடும் ஆல்பா-லாக்டால்புமின் என்ற புரதம், பல மார்பக புற்றுநோய் செல்களிலும் வெளிப்படுத்தப்படும் ஒரு மூலக்கூறை குறிவைத்து ஆன்டிபாடிகளின் உற்பத்தியை விஞ்ஞானிகள் கண்காணித்தனர்.
மேலும் முக்கால்வாசிக்கும் மேற்பட்ட பெண்களிடம் வலுவான ஆன்டிபாடி உற்பத்தி இருந்தது தெரியவந்தது. இது அவர்களின் நோய் எதிர்ப்பு அமைப்பு குறிக்கப்படக்கூடிய புரதத்தை வெற்றிகரமாக அடையாளம் கண்டதாகக் காட்டுகிறது. இதுகுறித்து ஆய்வாளர்கள் தெரிவித்ததாவது, சோதனைக்காலத்தில் காணப்பட்ட ஒரே பக்கவிளைவு என்னவென்றால், ஊசி செலுத்தப்பட்ட இடத்தில் எரிச்சல் மட்டுமே இருந்தது. இதனால் இந்த தடுப்பூசி இதுவரை பாதுகாப்பானதும், நல்ல அனுபவமாகவும் உள்ளது என்று குறிப்பிட்டனர்.
தடுப்பூசியை இணைந்து உருவாக்கும் அனிக்ஸ் பயோசயின்சஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் அமித் குமார், நியூயார்க் போஸ்ட்டுக்கு அளித்த பேட்டியில், இந்த வளர்ச்சி மிகவும் உற்சாகமாக இருப்பதாகக் கூறினார். புற்றுநோய் செல்கள் உடலின் சொந்த ஆரோக்கியமான செல்களிலிருந்து உருவாகின்றன என்பதால், நோயெதிர்ப்பு அமைப்பு அவற்றை தீங்கு விளைவிக்கும் என்பதை தெளிவாக அடையாளம் காண போராடுகிறது என்று குமார் விளக்கினார்.
Readmore: ஊக்க மருந்து பரிசோதனையில் சிக்கிய மல்யுத்த வீராங்கனைகள்.. ஒரு வருடம் சஸ்பெண்ட்..!!