ஜன் தன் கணக்குகள் மூடப்படும்.. தீயாக பரவிய செய்தி.. மத்திய அரசு விளக்கம்..

PM Jan Dhan Yojana 1

ஜன் தன் யோஜனா கணக்குகள் மூடப்படாது என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) திட்டத்தின் கீழ் செயல்படாத கணக்குகளை மூடுமாறு நிதி சேவைகள் துறை (DFS) வங்கிகளைக் கேட்டுக் கொண்டதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.. இந்த நிலையில் மத்திய நிதி அமைச்சகம் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.


செயல்படாத ஜன் தன் கணக்குகளை மூடுமாறு DFS வங்கிகளுக்கு எந்த அறிவுறுத்தலையும் வழங்கவில்லை என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த ஊடக அறிக்கைகள் தவறானவை என்று அமைச்சகம் கூறியுள்ளது.

செயல்படாத ஜன் தன் கணக்குகளின் எண்ணிக்கையை DFS தொடர்ந்து சரிபார்த்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செயல்படாத கணக்குகளை மீண்டும் செயல்படுத்த வங்கிகள் கணக்கு வைத்திருப்பவர்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

திட்ட விவரங்கள்

பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனா (PMJDY) என்பது மக்கள் அடிப்படை வங்கி சேவைகளைப் பெற உதவும் ஒரு அரசுத் திட்டமாகும். இந்த சேவைகளில் சேமிப்புக் கணக்குகளைத் திறப்பது, பணம் அனுப்புதல் மற்றும் பெறுதல், கடன்கள் பெறுதல், காப்பீடு மற்றும் ஓய்வூதியம் ஆகியவை அடங்கும். இந்தத் திட்டம் இந்த சேவைகளை அனைத்து மக்களுக்கும் எளிதான மற்றும் குறைந்த கட்டணத்தில் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் எந்த வங்கியிலோ அல்லது வங்கி மித்ரா (உதவியாளர்) மூலமாகவோ அடிப்படை சேமிப்புக் கணக்கைத் திறக்கலாம்.

இந்தத் திட்டத்தின் கீழ், வங்கி கணக்குகள் இல்லாதவர்களுக்கு ஒரு அடிப்படை சேமிப்புக் கணக்கு திறக்கப்படுகிறது. கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. கணக்கில் உள்ள பணத்திற்கு வட்டி கிடைக்கும். கணக்கு வைத்திருப்பவருக்கு ரூபே டெபிட் கார்டு வழங்கப்படுகிறது. இந்த அட்டையுடன், ₹1 லட்சம் விபத்து காப்பீடும் வழங்கப்படுகிறது. ஆகஸ்ட் 28, 2018 க்குப் பிறகு திறக்கப்பட்ட கணக்குகளுக்கு, ₹2 லட்சம் காப்பீடு கிடைக்க்கும்

தகுதியுள்ளவர்கள் ₹10,000 வரை ஓவர் டிராஃப்டையும் பெறலாம். ஜன் தன் கணக்கு வைத்திருப்பவர்கள் நேரடி பலன் பரிமாற்றம் (DBT), பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY), பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY), அடல் ஓய்வூதிய யோஜனா (APY) மற்றும் முத்ரா கடன் திட்டம் போன்ற பிற அரசு திட்டங்களின் பலன்களையும் பெறலாம்.

ஜன் தன் கணக்குகள் மூடப்படாது

ஜன் தன் கணக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. பல செயல்படாத கணக்குகளை வங்கிகள் மூடுவதாக எந்த உத்தேசமும் இல்லை. ஜன தன் கணக்குகளைக் குறைக்க அரசாங்கம் விரும்பவில்லை. வங்கி அமைப்பில் அதிகமான மக்களைச் சேர்ப்பதே அரசின் குறிக்கோள். மக்கள் போலி செய்திகளை நம்பக்கூடாது. அனைவரும் தங்கள் ஜன் தன் கணக்கைப் பயன்படுத்தி அரசாங்கத் திட்டங்களின் பலன்களைப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Read More : 8வது ஊதியக் குழு : ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய குட்நியூஸ்.. இந்த தொகை உயரப்போகிறது..

English Summary

The central government has clarified that Jan Dhan Yojana accounts will not be closed.

RUPA

Next Post

பிரபல டென்னிஸ் வீராங்கனை சுட்டுக்கொலை.. பெற்ற தந்தையே கொன்ற கொடூரம்..

Thu Jul 10 , 2025
டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் (25) தனது சொந்த தந்தையால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் 25 வயதான ராதிகா யாதவ். மாநில அளவிலான டென்னிஸ் வீராங்கனையான இவர் குருகிராமின் செக்டார் 57 இன் சுஷாந்த் லோக்-கட்டம் 2 இல் உள்ள வீட்டில் ராதிகா தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று நண்பகல் 12 மணியளவில் ராதிகாவை அவரின் தந்தை […]
radhika yadav tennis player from gurgaon shot dead by father

You May Like