டெல்லி, பெங்களூருவில் 80+ பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. “ ஒரு ஆன்மா கூட உயிர் பிழைக்காது..” என எச்சரிக்கை..

whatsapp image 2025 07 18 at 12.03.44 pm 1

டெல்லி, பெங்களூரு முழுவதும் 80க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

டெல்லியில் இன்று காலை சுமார் 50 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. டெல்லியில் சிவில் லைன்ஸில் உள்ள செயிண்ட் சேவியர்ஸ், பஸ்சிம் விஹாரில் உள்ள ரிச்மண்ட் குளோபல் பள்ளி, ரோஹினியில் உள்ள அபினவ் பப்ளிக் பள்ளி மற்றும் ரோஹினியில் உள்ள தி சவரன் பள்ளி உட்பட கிட்டத்தட்ட 50 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது..


இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள், தீயணைப்பு வீரர்கள், போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.. எனினும் இந்த சோதனையில் சந்தேகத்திற்கிடமான பொருள் எதுவும் கண்டறியப்படவில்லை.. இதையடுத்து இந்த மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்துள்ளது.. தேசிய தலைநகர் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு தொடர்ந்து 4-வது நாளாக இதுபோன்ற மிரட்டல்கள் விடுக்கப்பட்டது.

டெல்லியை தொடர்ந்து பெங்களூருவில் சுமார் 40 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. இதையடுத்து பெங்களூருவில் உள்ள பள்ளிகள் முழுவதும் தீவிர விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.. பெங்களூரு காவல்துறை பள்ளிகள் முழுவதும் பல குழுக்களை நிறுத்தியுள்ளது.. அவசர சேவைகள் வரவழைக்கப்பட்டுள்ளன

வெடிகுண்டு மிரட்டல் கடிதம்

வெடிகுண்டு மிரட்டல் கடிதத்தில், “பள்ளி வகுப்பறைகளுக்குள் நான் பல வெடி குண்டுகளை வைத்துள்ளேன் என்பதை உங்களுக்குத் தெரிவிக்கவே நான் எழுதுகிறேன். வெடிபொருட்கள் கருப்பு பிளாஸ்டிக் பைகளில் மறைக்கப்பட்டுள்ளன. இந்த உலகத்திலிருந்து உங்களில் ஒவ்வொருவரையும் நான் அழிப்பேன். ஒரு ஆன்மா கூட உயிர் பிழைக்காது. செய்திகளைப் பார்க்கும்போது நான் மகிழ்ச்சியுடன் சிரிப்பேன்..

நீங்கள் அனைவரும் துன்பப்பட வேண்டியவர்கள். என் வாழ்க்கையை நான் உண்மையிலேயே வெறுக்கிறேன், செய்தி வந்த பிறகு நான் தற்கொலை செய்து கொள்வேன், என் தொண்டையை அறுத்துவிடுவேன், என் மணிக்கட்டை அறுத்துவிடுவேன். மனநல மருத்துவர்கள், உளவியலாளர்கள், எனக்கு ஒருபோதும் உண்மையிலேயே உதவி கிடைக்கவில்லை; யாரும் அதைப் பற்றி கவலைப்படவில்லை, யாரும் கவலைப்பட மாட்டார்கள். உதவியற்ற மற்றும் அறியாத மனிதர்களுக்கு மருந்து கொடுப்பதில் மட்டுமே நீங்கள் அக்கறை கொள்கிறீர்கள், அந்த மருந்துகள் உங்கள் உறுப்புகளை அழிக்கின்றன அல்லது அவை அருவருப்பான எடை அதிகரிப்பை ஏற்படுத்துகின்றன என்று மனநல மருத்துவர்கள் ஒருபோதும் உங்களிடம் சொல்லவில்லை. மனநல மருந்துகள் அவர்களுக்கு உதவ முடியும் என்று மக்களை நினைக்க வைக்கிறீர்கள்.

ஆனால் அவர்கள் அவ்வாறு செய்ய மாட்டார்கள் என்பதற்கு நான் ஒரு உயிருள்ள சான்று. நீங்கள் அனைவரும் இதற்கு தகுதியானவர்கள். என்னைப் போலவே நீங்கள் துன்பப்பட தகுதியானவர்கள்,” என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இன்று வந்த வெடிகுண்டு மிரட்டல்களுட, இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 100 பள்ளிகளுக்கு மிரட்டல் செய்திகள் வந்துள்ளன. இதில், 60 பள்ளிகள் டெல்லியில் உள்ளன.. கடந்த வாரத்தில், டெல்லி முழுவதும் 60 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன. எனினும் சோதனையில் இது வெறும் புரளி என்பது தெரியவந்தது.. இந்த மிரட்டல்கள், என்கிரிப்ட் செய்யப்பட்ட நெட்வொர்க்குகள் மற்றும் VPN களில் இருந்து அனுப்பப்பட்டன, இதனால் கண்காணிப்பது கடினமாகிவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

“டார்க் வெப் மூலம் ஒருவரைக் கண்காணிப்பது கண்ணாடிகள் நிறைந்த அறையில் ஒரு நிழலைத் துரத்துவது போன்றது. நீங்கள் ஒரு தடயத்தைக் கண்டுபிடித்துவிட்டதாக நீங்கள் நினைக்கும் தருணத்தில், அது பெயர் தெரியாத மற்றொரு அடுக்குக்குப் பின்னால் மறைந்துவிடும்” என்று டெல்லி காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Read More : முகமது ஷமியின் முன்னாள் மனைவி மற்றும் மகள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு..!! பின்னணி என்ன..?

English Summary

Bomb threats to over 80 schools across Delhi and Bengaluru have caused a stir.

RUPA

Next Post

கூலி படத்தின் கதை இது தானா? லோகேஷ் பொத்தி பொத்தி வச்ச ரகசியம் லீக்கானது..

Fri Jul 18 , 2025
74 வயதிலும் நடிகர் ரஜினி இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அவர் கடைசியாக வேட்டையன் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது.. இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் ரஜினி நடித்துள்ளார். இந்த படம் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.. இந்த படத்தில் நாகார்ஜுனா, […]
AA1IKosh

You May Like