பொதுத்துறை வங்கியில் 2500 காலி பணியிடங்கள்.. ரூ.85,920 சம்பளம்..!! விண்ணப்பிக்க ரெடியா..?

bank job 1

பொதுத்துறை வங்கியான பரோடா வங்கி தனது கிளை அலுவலங்களில் காலியாக உள்ள 2500 உள்ளூர் அதிகாரி காலியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


பணியிடங்கள் விவரம்: உள்ளூர் அதிகாரி- 2,500 காலிப்பணியிடங்கள் உள்ளன. மாநில வாரியாக பார்த்தால் தமிழ்நாடு – 60, கேரளா – 50, கர்நாடகா – 450, மகாராஷ்டிரா – 485, குஜராத் – 1,160 , ஒடிசா – 60 என 18 மாநிலங்களில் உள்ள பணியிடங்கள் நிரப்பபடுகின்றன.

கல்வித் தகுதி: ஏதாவது ஒரு பட்டப் படிப்பு. மேலும் தாய் மொழியில் வாசிக்க, எழுத, பேச தெரிந்திருக்க வேண்டும். மேலும், மண்டல ஊரக வங்கி (அல்லது) அட்டவணை வணிக வங்கிகளில் குறைந்தபட்சம் ஓராண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

வயது வரம்பு: வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 01.07.2025 தேதியின்படி 21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கிட்டின் அடிப்படையில் சில பிரிவுகளுக்கேற்ப வயது தளர்வுகள் உண்டு. SC/ST, பிரிவினருக்கு 5 ஆண்டு தளர்வு, ஒபிசிக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரையிலான தளர்வுகள் அளிக்கப்படுகின்றன. முன்னாள் ராணுவத்தினருக்கும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பள விவரம்: இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் அடிப்படை சம்பளமாக ரூ.48,480 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதர செலவினங்கள் சேர்த்து மாதம் ரூ.85,920 வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு நடைபெறும் முறை: தேர்வு ஆன்லைன் எழுத்துத் தேர்வு மூலமாக நடத்தப்படும், பின்னர் நேர்காணல் அல்லது குழுக் கலந்துரையாடல் நடை பெறும். ஆன்லைன் தேர்வு 120 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்; இதில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 40% மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். இடஒதுக்கீடு பெறும் வகுப்பினர் குறைந்தபட்சம் 35% மதிப்பெண்களை பெற வேண்டும். தேர்ச்சி பெறுபவர்கள் மொழி தகுதிக்கான தேர்விலும் தகுதி பெற வேண்டும்.

கடைசி தேதி: விண்ணப்பிக்க கடைசி நாள் 03.08.2025 ம் தேதியாகும். மேலும், விவரங்களுக்கு bankofbaroda.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Read more: திருமண ஆசை காட்டி பெண்ணுடன் உல்லாசம்.. பாஜக MLA மகன் மீது காவல் நிலையத்தில் பரபர புகார்

English Summary

2500 vacant posts in public sector bank.. Salary Rs.85,920..!! Ready to apply..?

Next Post

போயிங் 787 எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச்-ல் எந்த பிரச்சனையும் இல்லை.. ஏர் இந்தியா ஆய்வில் தகவல்..

Tue Jul 22 , 2025
Air India has inspected the locking system of the Fuel Control Switch (FCS) of Boeing 737 aircraft.
687f48b150d00 fuel switch locks checked on all boeing 787s says air india no issues found 221539524 16x9 1

You May Like