கார்கில் போர் வெற்றி தினம் இன்று!. பாகிஸ்தான் படைகளை விரட்டியடித்து வெற்றிக்கொடி நாட்டிய இந்திய வீரர்கள்!.போர் மூண்டது எதற்காக தெரியுமா?.

kargil war 11zon

கார்கில் போரின் வெற்றிக்கான வேர், நம் நாடு முழுவதும் பரவியிருக்கிறது. இந்த வேர்களால், கார்கிலில் அறுவடை செய்த வெற்றியின் வெள்ளி விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். கார்கிலில் அப்படி என்ன நடந்தது….? போர் மூண்டது எதற்காக…? என்ற வரலாறை, கால் நூற்றாண்டு பின்னோக்கிப் பார்க்கலாம்..


இந்தியாவும், பாகிஸ்தானும் தனித்தனியாக பிரிக்கப்பட்ட காலம்தொட்டே, இரு நாடுகளுக்கும் எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. அவ்வப்போது இரு நாடுகளுக்கும் சண்டைகளும் நடைபெற்று வந்திருக்கின்றன. அவற்றில் 1999-ம் ஆண்டு நடந்த போர்தான், மிகவும் தீவிரமான போராக இருந்தது. அந்தப் போரின் பெயர் ‘கார்கில்.’ பாகிஸ்தான் ராணுவத்தினர் 1999-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கார்கில் பகுதியில் ஊடுருவி அதனை ஆக்கிரமித்தனர்.
இதனால் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் போர் மூண்டது.

உரிமை கொண்ட மண்ணை விட்டுவிடக் கூடாதென, உறுதியாக இருந்த இந்தியா, ஆபரேஷன் விஜய் என்ற செயல்திட்டத்துடன் களம் கண்டது.. இந்திய ராணுவத்துடன் வான்படையும் இணைந்தது. மே மாதம் மூண்ட போர், இரவு பகலாக தொடர்ந்தது. ஜூன் மாதம் கடந்து, ஜூலையிலும் நீடித்தது. ’விஜய்’ என்றால் வெற்றி. நிச்சய வெற்றிக்காக ‘ஆபரேஷன் விஜய்’ செயல்திட்டத்துடன் சூளுரைத்தது இந்தியா.

மிகப்பெரிய மலைத் தொடரில் இந்த போர் நடந்தது. சவால்கள் நிறைந்த இந்தப் போரில், பாகிஸ்தானுக்கு இந்தியா பலத்த அடி கொடுத்தது. பாகிஸ்தானின் செயலுக்கு அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மன், ஜப்பான் என உலகின் முக்கியமான நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்தன. இந்தியாவும் கூட பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் எதற்கும் பாகிஸ்தான் செவிசாய்க்கவில்லை. இதனால் போர் தீவிரம் அடைந்தது. விமானப்படை உதவியுடன், டைகர் மலைப் பகுதியை முதலில் இந்தியா கைப்பற்றியது. அடுத்து வரிசையாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்திருந்த ரொலோலிங் மலை, பத்ரா டாப், ஸ்ரீநர் லே என அனைத்துப் பகுதிகளையும் இந்தியா கைப்பற்றியது. இறுதியாக ஜூலை 26-ந் தேதி, கார்கில் பகுதியை மீண்டும் கைப்பற்றி, அங்கு நம் நாட்டுக் கொடியை இந்திய ராணுவ வீர்கள் நாட்டினர்.

இந்திய தரப்பில் 543 ராணுவ வீரர்கள் தங்கள் இன்னுயிரைக் கொடுத்து, இந்த வெற்றியை இந்தியாவிற்கு பரிசளித்தனர். பாகிஸ்தான் தரப்பிலும் ஏராளமானவர்கள் பலியாகியிருந்தனர். கார்கில் போரில் வெற்றி பெற்றதன் நினைவாக, ஆண்டுதோறும் ஜூலை 26-ந் தேதியை ‘கார்கில் வெற்றி தினம்’ என்று கொண்டாடி வருகிறோம். இந்த நாளில், போரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவாக மவுன அஞ்சலி செலுத்தப்படும். எனவே இந்த நாளில் இந்தியாவையே பெருமைப்பட வைத்த ராணுவ வீரர்களின் தியாகங்களை நினைவுக்கூர்த்து போற்ற வேண்டிய நாள் இதுவாகும்.

Readmore: “ எங்களை தோற்கடிக்க முடியலன்னா.. நீக்குவீங்களா.. நெருப்புடன் விளையாடாதீங்க..” முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை..

KOKILA

Next Post

கம்போடியாவுடன் தீவிரமடைந்த போர்!. தாய்லாந்தில் அவசரநிலை பிரகடனம்!. பாதுகாப்பாக இருக்க மக்களுக்கு அறிவுறுத்தல்!

Sat Jul 26 , 2025
கம்போடியாவுடனான மோதல்கள் அதிகரித்து வருவதால், தாய்லாந்து எட்டு எல்லை மாவட்டங்களில் அவசரகால நிலையை அறிவித்து, இராணுவச் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது, மோதல்கள் அதிகரிக்கும் போது குடிமக்கள் பயணத்தைத் தவிர்க்கவும், விழிப்புடன் இருக்கவும், அதிகாரப்பூர்வ பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையிலான சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் பல வாரங்களாக நீடித்த மோதலுக்குப் பிறகு வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது பதினொரு தாய்லாந்து பொதுமக்களும் ஒரு சிப்பாயும் கொல்லப்பட்டனர். இதை […]
thailand declares emergency 11zon 1

You May Like