இந்தியாவின் நம்பகமான பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்), நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட ‘சுதந்திர தின திட்டத்தை’ ஆகஸ்ட் 1, 2025 அன்று அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் ஆகஸ்ட் மாதத்தில் பிஎஸ்என்எல்-ன் 4ஜி சேவைகளை ஒரு மாதத்திற்கு இலவசமாக சோதித்துப் பார்க்க, வரையறுக்கப்பட்ட காலத்திற்கு ரூ.1 விலையில் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
இந்த முயற்சி, இந்தியாவின் சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகும், மேலும் இந்தியாவில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 4ஜி தொழில்நுட்பத்தை இலவசமாக அனுபவிக்க குடிமக்களுக்கு ஒரு வாய்ப்பை அளிக்கிறது. இந்த திட்டத்தில் ; வரம்பற்ற குரல் அழைப்புகள் (உள்ளூர்/STD), தினசரி 2 ஜிபி அதிவேக டேட்டா, தினசரி 100 எஸ்எம்எஸ், ஒரு பிஎஸ்என்எல் சிம் முற்றிலும் இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆத்மநிர்பார் பாரத்’ திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டுள்ள பிஎஸ்என்எல்-ன் 4ஜி சேவையின் மூலம், இந்தியா தனது சொந்த தொலைத்தொடர்பு கட்டமைப்பை உருவாக்கிய ஒரு சில நாடுகளில் ஒன்றாக இருப்பதில் பிஎஸ்என்எல் பெருமை கொள்கிறது. பிஎஸ்என்எல் ‘சுதந்திர தின திட்டம்’, ஒவ்வொரு இந்தியருக்கும் இந்த உள்நாட்டு நெட்வொர்க்கை 30 நாட்களுக்கு இலவசமாக சோதித்துப் பார்க்க ஒரு வாய்ப்பை வழங்குகிறது, மேலும் வாடிக்கையாளர்கள் இந்த வித்தியாசத்தை உணர்வார்கள் என்று பிஎஸ்என்எல் நம்புகிறது.
‘மேக்-இன்-இந்தியா’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நாடு முழுவதும் 1,00,000 4ஜி தளங்களை பிஎஸ்என்எல் நிறுவி வருகிறது, மேலும் இந்த முயற்சி பாதுகாப்பான, உயர்தர மற்றும் மலிவான மொபைல் இணைப்பின் மூலம் டிஜிட்டல் இந்தியாவிற்கு அதிகாரம் அளிக்கும் ஒரு முக்கிய மைல்கல்லாகும். குடிமக்கள் அருகிலுள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையம் அல்லது மேளா இடங்களுக்குச் சென்று இந்த சுதந்திர திட்டத்தை பெறலாம்.