சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் மாரடைப்பு வராது..!! ஏன் தெரியுமா..? மருத்துவர்கள் சொல்லும் காரணம்..!!

Sugar 2025

இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், உடல்பருமன் என்பது பெரும்பாலானோருக்கு பெரிய சவாலாகவே மாறியுள்ளது. இதை கட்டுப்படுத்த சர்க்கரையை முற்றிலும் தவிர்ப்பது போன்ற சில டயட் முறைகள் இப்போது பெரும் வரவேற்பைப் பெறுகின்றன. மேலும், சர்க்கரையை தவிர்ப்பதால் உடல் எடைக் குறைப்பு மட்டுமல்ல, அதைவிட மேலான பல நன்மைகளும் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றன.


மேலும் தேநீர், காஃபி போன்ற பானங்களில் சர்க்கரையை தவிர்த்தால் மட்டும் போதாது. நாம் அடிக்கடி சாப்பிடும் ஐஸ்கிரீம்கள், பாக்கெட் உணவுகள் இவைகளில் உள்ள மறைமுகமான சர்க்கரை மற்றும் உப்பு அளவுகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் தன்மை கொண்டவை என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். உணவில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது, வெறும் உடல் எடையை குறைப்பதற்கான ஒரு முயற்சியாக மட்டுமின்றி, இது உடலை பலவிதமான வீக்கம், அழற்சி மற்றும் ஆபத்தான நோய்கள் (மாரடைப்பு, நீரிழிவு, பக்கவாதம்) போன்றவற்றில் இருந்தும் பாதுகாக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சர்க்கரை குறைப்பதால் ஏற்படும் நன்மைகள் :

* ரத்தக்குழாய்களில் ஏற்படும் வீக்கம் குறையும்

* இதய நோய்கள் மற்றும் நீரிழிவு அபாயம் குறையும்

* மன அழுத்தம், சோர்வு குறைந்து சுறுசுறுப்பாக இருக்கலாம்

சர்க்கரை தேவையா? இல்லையா? :

சர்க்கரையை முற்றிலும் தவிர்ப்பது அனைவருக்கும் தேவையில்லை. உடலுக்கு தேவையான அளவு சர்க்கரையை இயற்கை வழிகளில் கூட பெறலாம். உதாரணத்திற்கு பழங்கள், தேன், பேரிச்சம்பழம் ஆகியற்றில் இயற்கையான சர்க்கரை உள்ளது.

மருத்துவர்களின் பரிந்துரை :

* தினமும் குறைந்தது 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

* நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்வவர்கள், ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை சிறிய நடை மேற்கொள்ள வேண்டும்.

* தினமும் அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும்.

* தேநீர், காஃபி போன்ற பானங்களை அளவோடு சாப்பிட வேண்டும்.

Read More : கலப்பட பாலில் இருந்து நீங்கள் பாதுகாப்பாக இருக்கீங்களா..? இது தெரியாம இனி பால் வாங்காதீங்க..!!

CHELLA

Next Post

நடுவானில் பகீர்!. 2 மணிநேரம் வட்டமிட்ட ஏர் இந்திய விமானம்!. நூலிழையில் உயிர்தப்பிய எம்.பி.க்கள்., பயணிகள்!. சென்னையில் அவசர தரையிறக்கம்!

Mon Aug 11 , 2025
திருவனந்தபுரத்திலிருந்து புதுடெல்லிக்கு சென்றுக் கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடுவானில் வட்டமடித்த நிலையில், சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 10) திருவனந்தபுரத்திலிருந்து புது டெல்லிக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம், மோசமான வானிலை காரணமாக தொழில்நுட்பக் கோளாறு இருப்பதாக விமானக் குழுவினர் கண்டறிந்தனர். இதனால் உடனடியாக சென்னைக்குத் திருப்பி விடப்பட்டது. விமான எண் A12455 […]
AIR india flight MP 11zon

You May Like