fbpx

”எடப்பாடி பழனிசாமி பல கொலைகள் செய்திருக்கிறார்”..!! ”அவரை விடாதீங்க”..!! கனகராஜின் சகோதரர் தனபால் பரபரப்பு பேட்டி..!!

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்குத் தொடா்பான சிபிசிஐடி விசாரணைக்கு முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் காா் ஓட்டுநா் கனகராஜின் சகோதரா் தனபால் 2-வது முறையாக இன்று நேரில் ஆஜராகியுள்ளார்.

சிபிசிஐடி விசாரணைக்கு செல்லும் முன் செய்தியாளர்களை சந்தித்த அவர், “முதல் கட்ட விசாரணையில் 40-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன. இன்று மற்ற கேள்விகளை கேட்க இருக்கின்றனர். கனகராஜ் எடுத்து வந்த பைகள் யாரிடம் கொடுத்தார்கள் என்பது குறித்தும் தெரிவித்துள்ளேன். இதேபோல பல கொலைகளை பழனிசாமி செய்திருக்கிறார். இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். எடப்பாடி பழனிசாமி சொல்லிதான் கனகராஜ் இந்த சம்பவங்களை செய்தார். இதை என் தம்பி என்னிடம் சொல்லியிருக்கிறார்.

இதற்கு முன்னர் விசாரணை நடத்திய அதிகாரியை விலைக்கு வாங்கி விட்டனர். இப்போது நேர்மையான அதிகாரிகள் உள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி, இளங்கோவன், தங்கமணி, வேலுமணி ஆகியோர் கனகராஜை நேரடியாக மூளை சலவை செய்து இந்த விவகாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர். எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்தி முன்னே வந்தவர். நேரடியாக எதுவும் செய்யமாட்டார்.

சுதாகர் ஐஜி நடத்திய விசாரணையில் திருப்தி இல்லை. விசாரணையில் என்னை அடித்து துன்புறுத்தினார்கள். திமுக ஆட்சியில் உயர் அதிகாரிகள் மட்டும் தான் மாறி உள்ளனர். பிற அதிகாரிகள் இன்னும் எடப்பாடி பழனிசாமிக்குதான் பணி செய்து வருகின்றனர். சிபிசிஐடி போலிசார் எத்தனை நாள் விசாரணை நடத்தினாலும், பதில் சொல்ல நான் ரெடியாக இருக்கிறேன்.

சென்னையில் எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் 5 நாட்கள் கனகராஜை மூளை சலவை செய்துள்ளனர். அனைத்து உதவியும் செய்வதாக கனகராஜிடம் சொல்லியுள்ளனர். எடப்பாடி பழனிசாமியை விசாரித்தால் அனைத்து உண்மைகளும் தெரியவரும். எடப்பாடி பழனிசாமி வீட்டில்தான் சதிதிட்டம் போடப்பட்டது. எடப்பாடியுடன் இளங்கோவன், வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் இருந்தனர். எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும். அவரை விசாரிக்க சம்மன் அனுப்ப வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Chella

Next Post

இளநீர் குடிப்பதால் முகப்பருக்கள் குறையுமா....?

Tue Sep 26 , 2023
கோடை காலம் வந்து விட்டாலே, நம்முடைய உடலில் இருக்கும் சூட்டை தணிப்பதற்கு இன்றளவும் கிராமத்தில் இருக்கும் பலர் விரும்பி சாப்பிடுவது இளநீர்தான். அந்த இளநீரில் நம்மைப் பொறுத்தவரையில் சூட்டை தணிக்கும் தன்மை இருக்கிறது என்பது மட்டும்தான் நமக்கு தெரியும். ஆனால் அதில் பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? இந்த இளநீர் சாப்பிடுவது வெறும் தாகத்திற்காகவும், சூட்டை தணிப்பதற்காகவும் மட்டும் அல்ல, இந்த இளநீரில் நம்முடைய உடலுக்கு தேவைப்படும் […]

You May Like