இந்த முறை இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்று 78 ஆண்டுகள் ஆகின்றன. இந்த முறை இரு நாடுகளும் தங்கள் 79வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது. இந்தியாவில் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது, ஆனால் பாகிஸ்தானில் சுதந்திர தினம் ‘யாம்-இ-ஆசாதி’ என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றாக சுதந்திரம் பெற்றன, ஆனால் இதையும் மீறி, பாகிஸ்தான் அதன் யூம்-இ-ஆசாதியை ஒரு நாள் முன்னதாகவே அதாவது ஆகஸ்ட் 14 அன்று கொண்டாடுகிறது. ‘யாம்-இ-ஆசாதி’ என்றால் என்ன என்று தெரிந்துகொள்வோம்.
1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, அதே நேரத்தில் பாகிஸ்தான் தனி நாடாக மாறியது. முன்னதாக, பாகிஸ்தானில் சுதந்திர தினம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி கொண்டாடப்பட்டது, ஆனால் பின்னர் மக்கள் தங்கள் சுதந்திர தினத்தை இந்தியாவுடன் கொண்டாட மாட்டோம் என்று கூறினர்.
இஸ்லாமாபாத் அமைச்சரவைப் பிரிவின் தேசிய ஆவண மையத்தில் உள்ள ஆவணங்கள், 1948 ஜூன் 29 அன்று, அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலி கான் தலைமையில் கராச்சியில் ஒரு கூட்டம் நடைபெற்றதாகத் தெரிவிக்கின்றன. இந்தக் கூட்டத்தின் போது, பாகிஸ்தானின் சுதந்திர தினம் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்கு பதிலாக ஆகஸ்ட் 14 ஆம் தேதி கொண்டாடப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் இது தொடர்பான இறுதி முடிவை முகமது அலி ஜின்னா எடுப்பார். பின்னர் ஜின்னா இந்த முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்தார்.
பாகிஸ்தானில், சுதந்திர தினத்தன்று, கொடி ஏற்றப்படும், அணிவகுப்புகள் நடத்தப்படும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நிகழ்ச்சிகள் நடத்தப்படும், மக்கள் தங்கள் வீடுகளை பச்சை மற்றும் வெள்ளைக் கொடிகளால் அலங்கரிக்கிறார்கள். பாகிஸ்தானில் சுதந்திர சூழல் ஆகஸ்ட் 15 அன்று இந்தியாவில் இருப்பதைப் போலவே உள்ளது. தேதி மற்றும் வண்ணங்கள் மட்டுமே வேறுபடுகின்றன.
1947 ஜூலை 18ஆம் தேதி இந்திய சுதந்திர சட்டம் 1947 நிறுவப்பட்டது. 1947, ஆகஸ்ட் 15ஆம் தேதி இரண்டு சுதந்திர நாடுகள் இந்தியாவில் உருவாகும் ஒன்று இந்தியா என்றும் மற்றொன்று பாகிஸ்தான் என்றும் அறியப்படும் என இந்த சட்டம் கூறுகிறது. இப்படி ஒரே தேதியில் சுதந்திரம் பெற்ற இரண்டு நாடுகள் ஏன் அடுத்தடுத்த தினங்களில் சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றன என்பதன் பின்னணியில் சுவாரஸ்யமான விஷயங்கள் சொல்லப்படுகின்றன.
பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி வைஸ்ராயாகவும் பிரிட்டன்ம் அரசின் ஆட்சி பிரதிநிதியாகவும் அப்போது இருந்தவர் மவுண்ட்பேட்டன். இவர் தான் இரு நாடுகளிலும் அதிகார மாற்றத்தை கொண்டு வந்தவர். 1948க்கு முன் அதிகார மாற்றம் நிகழ வேண்டும் என முடிவு செய்த போது, அதனை விரைவுபடுத்தி 1947இல் குறிப்பாக ஆகஸ்ட் 15ஆம் தேதியே சுதந்திரம் வழங்க வேண்டும் என நிர்ணயம் செய்தவர் மவுண்ட்பேட்டன்.
எனவே ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திரத்தை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மவுண்ட் பேட்டன் ஒரே சமயத்தில் இரு நாடுகளுக்கும் அதிகார மாற்றத்தை வழங்க முடியாது. முதலில் இந்தியாவில் அதிகார மாற்றம் நிகழ்ந்தால் அவர் சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னல் ஜெனரல் ஆகிவிடுவார். எனவே தான் அவர் முதலில் கராச்சிக்கு சென்று அதாவது ஆகஸ்ட் 14 1947 அன்று கராச்சிக்கு சென்று முகமது அலி ஜின்னாவை சந்தித்து, அதிகாரத்தை மாற்றி அளித்ததாக கூறப்படுகிறது. பின்னர் இந்தியா வந்த மவுண்ட்பேட்டன் நள்ளிரவில் அதிகார மாற்றம் செய்தாராம்.
எனவே முதலில் பாகிஸ்தான் தலைவர்களும் , மக்களும் ஆகஸ்ட் 15ஆம் தேதியை தான் சுதந்திர தினமாக கொண்டாடினர். இந்நிலையில் தான் 1948இல் பாகிஸ்தானின் முதல் பிரதமரான லியாகத் அலி கான், அமைச்சரவை கூட்டத்தை கூட்டினார். அப்போது சுதந்திர தினம் கொண்டாட்டம் தொடர்பாக பேச்சுகள் எழவே, அமைச்சர்கள் இந்தியாவுக்கு முன்னதாக பாகிஸ்தான் தனது சுதந்திரத்தை கொண்டாட வேண்டும் என்று முன்மொழியப்பட்டதாக கூறப்படுகிறது. இது ஜின்னாவுக்கும் தெரிவிக்கப்பட்டு அவர் ஒப்புதலின் பேரில் ஆகஸ்ட் 14 சுதந்திர தினமாக அறிவிக்கப்பட்டு 1948 முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.
குறிப்பாக இஸ்லாமியர்களின் ரமலான் பண்டிகையின் முக்கிய நாளான 27ஆவது நாளுடன் ஆகஸ்ட் 14ஆம் தேதி ஒத்து போனதால் இந்த முடிவு எட்டப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்திய சுதந்திர சட்டம் 1947ஐ பொறுத்தவரை ஆகஸ்ட் 15 தான் பாகிஸ்தான் சுதந்திர தினம், அந்த நாளில் அந்நாட்டின் முதல் அமைச்சரவை பதவியேற்பு, சுதந்திர தினம் அஞ்சல் தலை வெளியீடு ஆகியவை நடந்தன. ஆனால் அடுத்த ஆண்டு முதல் ஆட்சியாளர்கள் பல காரணங்களை முன் வைத்து 14ஆம் தேதியை சுதந்திர தினமாக அறிவித்து கொண்டாடுகின்றனர்.
Readmore: சைவ உணவு முறை புற்றுநோயின் அபாயத்தை 25% குறைக்கிறது!. ஆய்வில் புதிய தகவல்!