‘மரணம் உங்கள் பெருவிரலில் தொடங்குகிறது’ சமூக ஊடக கூற்றின் உண்மை என்ன..? மருத்துவர்கள் விளக்கம்..

big toe numbness

சமூக ஊடகங்களில் அடிக்கடி ஆச்சரியப்பட வைக்கும் கூற்றுகள் பரவி வருகின்றன. சமீபத்தில் அதிகம் பேசப்பட்ட ஒன்று “மரணம் உங்கள் பெருவிரலில் தொடங்குகிறது”. இதற்கு காரணம், பெருவிரல் இதயத்திலிருந்து மிகவும் தொலைவில் உள்ள புள்ளியாக இருப்பது என்றும், நீண்ட நேரம் அசையாமல் இருப்பது கால்களில் இரத்த ஓட்டத்தை பாதிக்கிறது என்பதுமாக கூறப்படுகிறது.


தானே KIMS மருத்துவமனைகளின் இருதய மற்றும் வாஸ்குலர் அறுவை சிகிச்சை ஆலோசகர் டாக்டர் சௌமியா சேகர் ஜெனசமந்த் கூறுகையில், “இந்தக் கூற்று மிகைப்படுத்தப்பட்டதாக இருந்தாலும், முக்கியமான ஒரு கருத்தை முன்வைக்கிறது. பெருவிரல் இதயத்திலிருந்து மிகவும் தொலைவில் உள்ளது. இரத்த ஓட்டம் சரியாக இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். குறிப்பாக நீரிழிவு, புற தமனி நோய் (PAD) அல்லது இதய பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு கைகால்களில் இரத்த ஓட்டத்தில் சிக்கல் ஏற்படலாம். பெரிய உடல்நலப் பிரச்சினைகள் கால்விரல் அல்லது கால்களில் ஆரம்ப அறிகுறிகளைக் காட்டக்கூடும். ஆனால் மரணம் தொழில்நுட்ப ரீதியாக அங்கு தொடங்காது” என்று தெரிவித்தார்.

இரத்த ஓட்டம் குறையும்போது என்ன நடக்கும்? இதயத்திலிருந்து மிகவும் தொலைவில் உள்ள பாதங்கள், இரத்த ஓட்டக் குறைவுக்கு முதலில் பாதிக்கப்படக்கூடியவை. உணர்வின்மை, கூச்ச உணர்வு, குளிர், நிறமாற்றம், ஆறாத காயங்கள் போன்றவை இதன் அறிகுறிகள். தீவிரமாகும் போது, குறிப்பாக PAD அல்லது நீரிழிவு நரம்பியல் நோயாளிகளுக்கு, சிகிச்சையின்றி விட்டால் தொற்றுகள், புண்கள், கேங்க்ரீன் உருவாகும் அபாயம் உண்டு.

நீண்ட நேரம் உட்கார்வதின் அபாயம்: மும்பை கிளெனீகிள்ஸ் மருத்துவமனை பரேல் உள் மருத்துவ மூத்த ஆலோசகர் டாக்டர் மஞ்சுஷா அகர்வால் கூறுகையில், “நீங்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக உட்கார்ந்திருந்தால் கால்களுக்கு செல்லும் இரத்த ஓட்டம் பாதிக்கப்படும். இதனால் விறைப்பு, உணர்வின்மை, வீக்கம் ஏற்படலாம். அதனால் இயக்கம் அவசியம்” என்றார்.

புள்ளிவிவரங்களின்படி, ஒரே நிலையில் 1 மணி நேரம் உட்கார்ந்தால், கால்களுக்கு செல்லும் இரத்த ஓட்டம் கிட்டத்தட்ட 50% வரை குறையும். எனவே இடைவிடாமல் எழுந்து நிற்க, சில அடிகள் நடக்க அல்லது கால்களை நீட்டிக்க மருத்துவர் பரிந்துரைக்கிறார்கள்.

எதில் கவனம் செலுத்த வேண்டும்? டாக்டர் ஜெனசமந்த் கூற்றுபடி, குளிர் கால்விரல்கள், மெதுவாக குணமாகும் வெட்டுக்கள், தோல் நிறமாற்றம், தொடர்ச்சியான உணர்வின்மை போன்ற அறிகுறிகளை புறக்கணிக்கக் கூடாது. நீரிழிவு, புகைபிடித்தல் பழக்கம், உட்கார்ந்த வாழ்க்கை முறை கொண்டவர்களுக்கு அபாயம் அதிகம். வழக்கமான உடற்பயிற்சி, இரத்த சர்க்கரை மற்றும் கொழுப்பு கட்டுப்பாடு, கால்விரல் பரிசோதனை ஆகியவை ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும்” என்று டாக்டர் ஜெனசமந்த் கூறினார்.

Read more: 13,409 பேருக்கு வேலைவாய்ப்பு.. ரூ.1,937.76 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அனுமதி..!! – அமைச்சர் TRB ராஜா

English Summary

Social media claims ‘death begins in your big toe’; we ask experts what that means

Next Post

“மொத்த சத்தும் இதுல தான் இருக்கு”..!! ஈசல் சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புதமான மருத்துவ பயன்கள்..!!

Fri Aug 15 , 2025
மனிதனின் உணவுப் பழக்கங்களில், இயற்கையோடு இணைந்திருக்கும் பல மரபுகள் காலப் போக்கில் மறைந்துபோய் வருகிறது. ஆனால், சிலரால் தொடர்ந்து பாரம்பரியமாக அனுசரிக்கப்படும் உணவுப் பழக்கங்கள் நம் உடல்நலத்துக்கு வியப்பூட்டும் நன்மைகளை தருகின்றன. அந்த வகையில், பெரும்பாலானோர் தவறாக புரிந்து கொள்ளும் ஒரு உயிரினம் ஈசல். இது புழுவாக நினைத்து சிலர் அருகே கூட வர மாட்டார்கள். ஆனால், உண்மையில் ஆரோக்கிய ரீதியாக இது மருத்துவ மற்றும் ஊட்டச்சத்துகள் நிறைந்த ஒன்று. […]
Easel 2025

You May Like