2 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் மிக கனமழை வெளுத்து வாங்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!

rainfall 1699931590800 1704797100426

நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ வரும் 18-ம் தேதி வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும்.. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் வரும் 22-ம் தேதி வரை கனமழை தொடரும்.. அதன்படி இன்று வட தமிழகம், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளில், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.. நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், தேனியில் கனமழையும் பெய்யக்கூடும்.


நாளை, வட தமிழகம், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளில், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.. நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

வரும் 18 முதல் 22ம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்றும் நாளையும், வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.. நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். குறைந்தபட்ச வெப்பநிலை 26 – 27 டிகிரி வரையிலும், அதிகபட்ச வெப்பநிலை 33 -34 டிகிரி வரை இருக்கக்கூடும்..”

இன்று முதல் 20-ம் தேதி வரை தென் தமிழக கடலோர பகுதிகள், வட தமிழக கடலோர பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகள், தெற்கு, மத்திய வங்கக்கடல் பகுதிகள், வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான கடல் பகுதிகள், வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா கடலோர பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும், இடை இடையே 65 கி.மீ வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்..” என்று வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.

Read More : அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் தொடரும் சோதனை.. ED மீது பாய்ந்த வழக்கு.. என்ன நடந்தது?

RUPA

Next Post

SBI வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்..! வீட்டுக் கடன்களுக்கான EMI உயரப் போகுது..! முழு விவரம் இதோ..

Sat Aug 16 , 2025
வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் 25 அடிப்படை புள்ளிகளை உயர்த்தியுள்ளது SBI வங்கி. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கி ஆகஸ்ட் 1, 2025 முதல் அதன் வீட்டு மற்றும் வீட்டு தொடர்பான கடன் வட்டி விகிதங்களில் திருத்தங்களை மேற்கொண்டது. அதன் படி வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது. முன்னதாக, எஸ்பிஐயின் வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் 7.50% முதல் 8.45% வரை […]
home loans by sbi

You May Like