இப்ப உங்களிடம் ரூ.1 கோடி இருக்கா? 25 ஆண்டுகளுக்கு பின் அதன் மதிப்பு இத்தனை லட்சம் தான்! காரணத்தை தெரிஞ்சுக்கோங்க..!

gaf33b380bd193274f5addd948a656320d4388d2113370a150 1736331295741 1738746786053

உங்களிடம் இப்போது ஒரு கோடி ரூபாய் இருந்தாலும், அந்த கோடி ரூபாயின் மதிப்பு எப்போதுமே ஒரே மாதிரியாக இருக்காது. ஆண்டுகள் செல்லச் செல்ல அதன் மதிப்பு குறைகிறது. இப்போது, உங்களிடம் ரூ.1 கோடி இருந்தால், அது மிகப் பெரிய தொகையாகத் தோன்றலாம். அந்தப் பணத்தைக் கொண்டு, உங்கள் மகளுக்கு பிரமாண்டமாக திருமணம் செய்து வைக்கலாம் அல்லது ஒரு நல்ல வீடு வாங்கலாம். அல்லது உங்கள் குழந்தைகளை வெளிநாட்டில் படிக்க அனுப்பலாம்.


ஆனால், 25 ஆண்டுகளுக்குப் பிறகு, 2050 இல், இப்போது நம்மிடம் உள்ள அதே பணத்தில் இதையெல்லாம் செய்ய முடியுமா என்றால்.. அது சாத்தியமில்லை என்பதே பதில். இதற்கு பணவீக்கம் காரணமாகும். உதாரணமாக, நீங்கள் இப்போது 100 ரூபாய்க்கு ஒரு பொருளை வாங்கினால், அடுத்த ஆண்டு அதே பொருளை வாங்க 106 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். அதாவது பணவீக்க விகிதம் 6 சதவீதம். பணவீக்கம் காரணமாக, உங்கள் பணத்தின் மதிப்பு குறையும்.

2050 ஆம் ஆண்டுக்குள் ரூ.1 கோடி எவ்வளவு மதிப்புடையதாக இருக்கும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? விலை உயர்வு காரணமாக பணத்தின் மதிப்பு தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. பணவீக்கம் என்பது பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் ஆண்டுதோறும் அதிகரிப்பதைக் குறிக்கிறது. இது நம்மிடம் உள்ள பணத்தின் வாங்கும் சக்தியைக் குறைக்கிறது.

கடந்த 20-25 ஆண்டுகளில், இந்தியாவில் சில்லறை பணவீக்கம் சராசரியாக 6% ஆக உள்ளது. அடுத்த 25 ஆண்டுகளில் இது சராசரியாக 5% ஆக இருக்கும் என்று வைத்துக்கொள்வோம். இந்தக் கணக்கீட்டின்படி, உங்களிடம் இப்போது உள்ள ரூ. 1 கோடியின் மதிப்பு 2050 இல் ரூ. 29.53 லட்சமாக மட்டுமே இருக்கும். அதாவது, இன்று ரூ. 1 கோடி மதிப்புள்ள ஒரு திருமணத்திற்கோ அல்லது வீட்டிற்கும், 2050 இல் குறைந்தது ரூ. 3.4 கோடி செலவிட வேண்டியிருக்கும். இந்த செயல்முறை மெதுவாக நடக்கும்.. ஆனால் அதே நேரம் இது நிச்சயமாக நடக்கும் ஒரு மாற்றம்.

பணத்தின் மதிப்பு இப்படி குறைந்து கொண்டே வந்தால், நமது எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்ய நமக்கு அதிக பணம் தேவைப்படும். அதனால்தான் முன்கூட்டியே ஒரு நல்ல நிதித் திட்டத்தை வைத்திருக்க வேண்டும். நீங்கள் முதலீடு செய்வதற்கு முன், பணவீக்கத்தை விட அதிக லாபத்தைத் தரும் வழிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உதாரணமாக, பணவீக்கம் 5 சதவீதம் அல்லது 6 சதவீதம் என்று வைத்துக்கொள்வோம். எனவே, உங்கள் பணத்தின் மதிப்பு குறையாமல் இருக்க, அதிக சதவீத வருமானத்தைத் தருபவற்றில் முதலீடு செய்ய வேண்டும்.

தற்போது, பொது வருங்கால வைப்பு நிதி (PPF) 7.10% வட்டியையும், தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC) 7.7% வட்டியையும், கிசான் விகாஸ் பத்திரம் (KVP) 7.5% வட்டியையும், மூத்த குடிமக்கள் திட்டம் (SCSS) 8.2% வட்டியையும், நிலையான வைப்பு நிதிகளும் 6.6% முதல் 8.25% வரை வட்டியையும் வழங்குகின்றன. இவை அனைத்தும் பாதுகாப்பான முதலீடுகள். நல்ல மியூச்சுவல் ஃபண்டுகள் நீண்ட காலத்திற்கு 12% முதல் 15% வரை வருமானத்தைத் தரும் என்பதை கடந்த கால வரலாறு காட்டுகிறது.

சரி… இப்போது, உங்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதைப் பார்த்து, மதிப்பை இழக்காமல் நல்ல வருமானத்தைத் தரும் ஏதாவது ஒன்றில் முதலீடு செய்யுங்கள். நீங்கள் முதலீடு செய்யாமல் பணத்தை வங்கிக் கணக்கில் வைத்தால், அதன் மதிப்பு குறையும். எனினும் உங்கள் சரியான நிதி திட்டமிடலுக்கான நிதி ஆலோசகரை அணுகவும்.

Read More : மோடி அரசு சொன்ன குட்நியூஸ்..! எந்த உத்தரவாதமும் இல்லாமல் ரூ.50,000 வரை கடன்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?

RUPA

Next Post

1 ரூபாய் கூட செலவழிக்க வேண்டியதில்லை.. பார்லருக்கு போக வேண்டாம்.. வீட்டிலேயே பளபளப்பான சருமத்திற்கான சீக்ரெட் !

Tue Aug 19 , 2025
In this post, you can learn the secret to getting glowing skin at home.
AdobeStock 619642729 1

You May Like