பெரும் சோகம்!. லாரி மீது பேருந்து மோதியதில் 70க்கும் மேற்பட்டோர் பலி!. புலம்பெயந்தோரை ஏற்றிச் சென்றபோது நிகழ்ந்த பயங்கரம்!. பகீர் வீடியோ

1557133 accident 2

மேற்கு ஆப்கானிஸ்தானில் புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற பயணிகள் பேருந்து லாரி மீது மோதிய விபத்தில் 70க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.


ஈரானில் இருந்து இருந்து புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு சென்றுக்கொண்டிருந்தது. அப்போது அதிவேகமாக சென்ற பேருந்து, லாரி மற்றும் பைக் உள்ளிட்ட வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி கோர விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 70க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இந்த விபத்தில் பலியானவர்களில் பெரும்பாலானோர் பேருந்தில் இருந்தவர்கள் எனவும், லாரியில் பயணித்த இருவர், மோட்டார் சைக்கிளில் இருந்த இருவர் கொல்லப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல தசாப்த கால மோதலுக்குப் பிறகு மோசமான சாலைகள், நெடுஞ்சாலைகளில் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் ஒழுங்குமுறை இல்லாதது போன்ற காரணங்களால் ஆப்கானிஸ்தானில் போக்குவரத்து விபத்துக்கள் பொதுவானவை. கடந்த ஆண்டு டிசம்பரில், மத்திய ஆப்கானிஸ்தான் வழியாக நெடுஞ்சாலையில் எரிபொருள் டேங்கர் லாரி மற்றும் ஒரு லாரி மோதிய இரண்டு பேருந்து விபத்துகளில் குறைந்தது 52 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Readmore: 4 ஆண்டுகளில் 24 காவல் மரணங்கள்..! காவல்துறை மீதான மக்களின் நம்பிக்கை புதிய சரிந்துள்ளது..!

KOKILA

Next Post

ஒரே நாளில் 100 பேர்... அ.தி.மு.க-வில் மீண்டும் தனது ஆட்டத்தை ஆரம்பித்த செங்கோட்டையன்...!

Wed Aug 20 , 2025
ஈரோடு மாவட்டம், அந்தியூர் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட மாற்று கட்சியினர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் கட்சியான திமுக, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஆகியவை மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றன. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மத்தியில் ஆளும் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. ஆனால் இந்த கூட்டணி அமைந்தது முதல் பெரும் […]
sengotai 2025

You May Like