“என் புருஷன் ரொம்ப சித்ரவதை செய்யுறான்”..!! கள்ளக்காதலனுடன் வெப் சீரிஸ் பார்த்து கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி..!!

Rape marital Rape

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த பெட்ஷீட் தயாரிப்பு தொழிற்சாலையில் பணியாற்றும் ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட குழப்பம், ஒருவரது உயிரை பறிக்கும் அளவிற்கு சென்றுள்ளது. சந்தோஷ் தேவி எனும் பெண், தன் கணவர் மனோஜ் இடமிருந்து நீண்டகாலமாக சித்ரவதையை அனுபவித்து வந்துள்ளார். மனோஜ் ஒரு இ-ரிக்‌ஷா ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார்.


தனது குடும்ப சூழ்நிலையால் மனம் நொந்துபோன சண்டோஷ் தேவி, தனது தொழிற்சாலையில் பணியாற்றி வந்த ரிஷி ஸ்ரீவத்ஸவா என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதையடுத்து, தங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் மனோஜை தீர்த்துக் கட்ட இருவரும் முடிவெடுத்துள்ளனர்.

கொலை செய்வதற்கு முன் இருவரும் கூகுளில் “எப்படி கொலை செய்வது?” என தேடியுள்ளனர். ஆனால், அவர்களுக்கு திருப்திகரமான பதில்கள் கிடைக்கவில்லை. இதனால், பிரபல கிரைம் வெப் சீரிஸ்கள் மூலம் யோசனைகள் பெற்றனர்.

அதன்படி, ரிஷி மனோஜின் இ-ரிக்‌ஷாவில் பயணிபோல் பயணித்துள்ளார். பின்னர், ரிஷியின் நண்பர் மோகித் சர்மா ரிக்‌ஷாவில் ஏறியுள்ளார். இருவரும் சேர்ந்து, ஆள் நடமாட்டமில்லாத இடத்திற்கு மனோஜை அழைத்துச் சென்று கொலை செய்துள்ளார்.

இந்த கொலையை மறைப்பதற்காக உடைகளை மாற்றி, கைபேசி சிம்கார்டுகளை அழித்து, தடயங்களை அழிக்க முயன்றனர். ஆனால், இந்த வழக்கில் போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை விரைந்து கைது செய்தனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், மனைவி சந்தோஷ் தேவி தனது காதலரான ரிஷியுடன் இணைந்து, கணவரை திட்டமிட்டு கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது. இதில், மோகித் சர்மா மூன்றாவது நபராக நேரடியாக பங்கு பெற்றிருந்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் ஜெய்ப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Read More : இந்த ஒரு பொருள் இருந்தால் போதும்..!! உங்கள் வீடே பளிச்சென ஜொலிக்கும்..!! இல்லத்தரசிகளே சூப்பர் டிப்ஸ்..!!

CHELLA

Next Post

“இது ஒரு கருப்பு நாள்.. கருப்பு மசோதா... இந்தியாவை சர்வாதிகாரமாக மாற்றும் பாஜக..” கொந்தளித்த முதல்வர் ஸ்டாலின்!

Wed Aug 20 , 2025
கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்ட பிரதமர் அல்லது முதலமைச்சர்களை பதவி நீக்கம் செய்வதற்கான புதிய மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மக்களவையில் அறிமுகம் செய்தார்.. ஆனால் இது அரசியலமைப்புக்கு எதிரானது என்று கூறி எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடுமையாக எதிர்த்தனர்.. இதனால் மக்களவையில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.. இருப்பினும், ஷா, மூன்று மசோதாக்களையும் கூட்டு நாடாளுமன்றக் குழுவிற்கு (ஜே.பி.சி) மேலும் விவாதத்திற்கு அனுப்ப வேண்டும் என்று […]
stalin amit shah

You May Like