உங்களுக்கு கடன் தொல்லையே இருக்கக் கூடாதா..? அப்படினா பிரதோஷம் அன்று இதை பண்ணுங்க..!!

Sivan 2025

பிரதோஷம் என்றால் உடனே நம்முடைய நினைவுக்கு வருவது சிவபெருமானின் அருள் பெரும் நேரம் தான். ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கும், பௌர்ணமிக்கும் முன் வரும் திரயோதசி திதியில் பிரதோஷ விரதம் கடைபிடிக்கப்படுகிறது. மாலை 4.30 முதல் 6 மணி வரை நடைபெறும் பிரதோஷ காலத்தில், சிவ ஆலயங்களில் நந்தி முன் அமர்ந்து சிவனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.


வழக்கமாக புதன்கிழமைகள் பெருமாளுக்குரிய நாளாகக் கருதப்படும். இந்த நாளில் பிரதோஷம் வரும்போது, நரசிம்மருக்கு அர்ப்பணிக்கும் வழிபாடுகள் இன்னும் விசேஷமாய் விளங்கும். நரசிம்ம மூர்த்தியை தரிசித்து, பானகம் நைவேத்யமாக சமர்ப்பித்து, ருண விமோசன ஸ்தோத்திரம் பாராயணம் செய்வது பக்தர்களிடையே அதிகம் இருக்கிறது.

பிரதோஷம் அன்று நரசிம்மரை தரிசிப்பது, பக்தியின் ஒரு வலிமையான வடிவம். நம்மில் பலர் கடன்களில் சிக்கி, மனச்சோர்வுடன் போராடிக்கொண்டிருப்போம். இத்தகைய காலங்களில், லட்சுமி நரசிம்மருக்கு பக்தியுடன் செய்யப்படும் வழிபாடு, மனதை சுத்தமாக்கி, வாழ்க்கையில் நம்பிக்கையை தூண்டும்.

அதனால்தான், இந்த பிரதோஷ வேளையில், நம்மைச் சுற்றியுள்ள நரசிம்மர் சன்னதிகள் எங்கு இருக்கின்றன என்பதை பார்த்து, அதில் ஒரு கோயிலுக்கு சென்று, துளசி மாலையுடன் பக்தியால் வழிபடலாம். முடிந்தால் பானகம் செய்து, பக்தர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்.

Read More : 2000 ஆண்டுகள் பழமை.. மாங்கல்ய பாக்கியம் அருளும் காளி கோயில்..!! எங்க இருக்கு தெரியுமா..?

CHELLA

Next Post

மகிழ்ச்சி..! தமிழகம் முழுவதும் 14 அரசு பள்ளிகளின் தரம் உயர்வு...! பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு...!

Thu Aug 21 , 2025
பள்ளிக்கல்வித் துறையில் 14 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் சந்திரமோகன் வெளியிட்ட அரசாணையில்; நடப்பு கல்வியாண்டில் (2025-26) 14 அரசு நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின் போது அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி கரையவெட்டி (அரியலூர்), சிறுக்களஞ்சி (ஈரோடு), மேட்டுநாசுவம்பாளையம் (ஈரோடு), நத்தம் (கடலூர்), […]
tn school 2025

You May Like