நாடு முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்கள், ரேஷன் கார்டு பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், வருமான வரி செலுத்துபவர்கள், சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள், நிறுவனங்களில் இயக்குநராக செயல்படும் நபர்கள் போன்றோர், இலவச மற்றும் மானிய ரேஷன் உதவிக்குரிய நபர்கள் அல்ல என்றும், இவர்கள் சமூக பாதுகாப்பு திட்டங்களை தவறாக பயன்படுத்தக் கூடாது என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
எனவே, மாநில அரசுகள் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் தகுதியற்ற பயனாளிகளை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது, ரேஷன் பொருட்கள் உரிய பயனர்களுக்கு சென்றடைவதை உறுதிப்படுத்தும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய உணவுத்துறைச் செயலர் சஞ்சீவ் சோப்ராவின் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பிற அமைச்சகங்களிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், தகுதியற்ற பயனாளிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பட்டியல், ‘Rightful Targeting Dashboard’ எனும் புதிய கண்காணிப்பு அமைப்பின் மூலம் மாநில அதிகாரிகள் பார்வையிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தகுதி மீறி பெயர்கள் இருந்தால் அவற்றை உடனடியாக நீக்க வேண்டும்.
2021 முதல் 2023 வரையிலான காலக்கட்டத்தில், நாடு முழுவதும் 1.34 கோடி போலியான அல்லது செயல்படாத ரேஷன் கார்டுகள் ஏற்கனவே நீக்கப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக தற்போது தொடங்கப்பட்டிருக்கும் புதிய பரிசோதனையும், திட்டங்களை நியாயமான பயனாளிகளிடம் கொண்டு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
நகர்ப்புறங்களில் 50% மக்களுக்கும், கிராமப்புறங்களில் 75% மக்களுக்கும் மானிய உணவுத் தானியங்கள் வழங்கும் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில், இந்தியா முழுவதும் ஆகஸ்ட் 19, 2025 வரை 19.17 கோடி ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 76 கோடியே 10 லட்சம் பேர் இதுவரை திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர்.
மேலும், ‘பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ், இலவசமாக உணவுத் தானியங்கள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே, அரசு தற்போது ரேஷன் விதிகளை மேலும் கடுமையாக்கியுள்ளது.
Read More : உங்களுக்கு அதிக வியர்வை வருதா..? இதை அசால்ட்டா விடாதீங்க.. ஆபத்து..!! மருத்துவர்கள் எச்சரிக்கை..!!