கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குறிமண்டி கிராமத்தை சேர்ந்தவர் கிரீஷ். இவருக்கு வயது 24. இவர், அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் சிறுமியுடன் பழகி வந்துள்ளார். அந்த சிறுமிக்கு வயது 17. இந்நிலையில், இவர்களின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, இருவரும் பல இடங்களுக்கு சுற்றியுள்ளனர். பின்னர், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைக் கூறி சிறுமியுடன் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார்.
மேலும், இது யாருக்கும் தெரியாமல் இருக்க வேண்டும் என சிறுமியையும் எச்சரித்துள்ளார். இதனால், பயத்தில் அவர் எங்கும் வெளியே சொல்லவில்லை. ஆனால், சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சிறுமியை அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி 4 மாதம் கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, சிறுமியிடம் அவரது பெற்றோர் நடத்திய விசாரணையில், உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. இதனைத் தொடர்ந்து, போலீசாரிடம் புகாரளிக்கப்பட்ட நிலையில், கிரீஷ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது தலைமறைவாக இருக்கும் அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read More : 68 கிலோவில் இருந்து 55 கிலோ..!! 45 நாட்களில் உடல் எடையை சட்டென குறைத்த சுனிதா..!! அவரே சொன்ன டிப்ஸ்..!!