ITI முடித்தவர்களுக்கு மத்திய அரசு பணி.. ரூ.30,845 சம்பளம்.. உடனே அப்ளை பண்ணுங்க..!!

job 3

மத்திய அரசு பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் திருச்சி ஆர்ட்னன்ஸ் தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ராணுவத்திற்கான ஆயுதங்கள் மற்றும் வெடிப் பொருட்களை தயாரிக்கும் இத்தொழிற்சாலையில் பல்வேறு தொழிற்பிரிவுகளில் 73 காலிப்பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.


பணியின் விவரங்கள்:

டர்னர் – 6
பிட்டர் (எலெட்ரானிக்ஸ்) – 6
கிரிண்டர் – 8
மெக்கானிஸ்ட் – 24
பெயிண்டர் – 3
வெல்டர் – 3
கெமிக்கல் செயல்முறை ஊழியர் – 3
எலெக்ட்ரோபிலேட்டர் (Electroplater) – 3
எக்ஸாபினர் (Examiner) – 8
OMHE – 1
மில்விரிட் (Millwright) – 2
எலெக்ட்ரிஷியன் – 4
பிட்டர் (G) – 1
பிட்டர் (Refrigeration) – 1

ஒதுக்கீடு:

  • எஸ்சி (SC): 8
  • ஒபிசி (OBC): 13
  • EWS: 2
  • பொதுப் பிரிவு (UR): 50
  • முன்னாள் ராணுவத்தினர் (Ex-Servicemen): 7
  • மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கீடு: 3 இடங்கள்

வயது வரம்பு:

  • அதிகபட்ச வயது: 35 வயது
  • குறைந்தபட்ச வயது: 18 வயது

மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்கள், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு பதவிக்காலத்துடன் கூடுதலாக 3 வருடம் தளர்வு வழங்கப்படும்.

கல்வித்தகுதி: இப்பணியிடங்களுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சிக்கு பின்னர் அந்தந்த தொழிற்பிரிவு அல்லது அதற்கு நிகரான தொழிற்பிரிவில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், டிப்ளமோ முடித்தவர்களுக்கு இதற்கு விண்ணப்பிக்கலாம். வெல்டர் பதவிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பின்னர் ஐடிஐ முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு மாதம் ரூ.19,900 என்பது அடிப்படை சம்பளம் ஆகும். தோராயமாக ஒரு மாதத்திற்கு ரூ.30,845 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் NCVT / ஐடிஐ தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையாகக் கொண்டு கட்-ஆஃப் மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்படும். அதன்பின் தகுதி பெற்றவர்கள் தொழிற்பிரிவு தேர்வு அல்லது திறன் தேர்விற்கு அழைக்கப்படுவர்.

இறுதி தேர்வில் ஐடிஐ மதிப்பெண்கள் 80%, திறன் தேர்வு மதிப்பெண்கள் 20%
என கணக்கிடப்பட்டு இறுதி பட்டியல் தயாரிக்கப்படும். பட்டியலில் இடம் பெற்றவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, அதன் பின் பணி நியமனம் வழங்கப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது?

* இந்த பணியிடங்களுக்கு ஐடிஐ தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

* விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://www.aweil.in/notice என்ற இணையதளத்தில் சென்று ஆன்லைன் விண்ணப்பத்தை நிரப்ப வேண்டும்.

* விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களின் நகல்கள் மற்றும் புகைப்படங்களை இணைக்க வேண்டும்.

* ஆன்லைன் விண்ணப்பத்தை நிரப்பிய பிறகு, அதனை பதிவிறக்கம் செய்து அச்சிட்டு, தேவையான ஆவணங்களின் நகல்களுடன் சேர்த்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

* இப்பணியிடங்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

அனுப்ப வேண்டிய முகவரி:

The Chief General Manager,
Ordnance Factory Tiruchirappalli,
Tamil Nadu -620016.

கடைசி தேதி: செப்டம்பர் 21.

Read more: சமைக்காத இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் சாப்பிட்ட 13 வயது சிறுவன் மரணம்! இது எவ்வளவு ஆபத்துன்னு தெரிஞ்சுக்கோங்க..!

English Summary

Central government job for ITI graduates.. Salary Rs.30,845.. Apply immediately..!!

Next Post

வெறும் 30 நிமிடங்கள்..!! இப்படி நடைபயிற்சி செய்தால் 10,000 படிகள் நடப்பதை விட கூடுதல் நன்மைகள் கிடைக்கும்..!!

Wed Aug 27 , 2025
உடல்நலம் குறித்துப் பேச்சு வந்தாலே, பெரும்பாலோர் முதலில் நினைப்பது “10,000 படிகள் நடக்க வேண்டும்” என்பதே. இது நீண்ட காலமாகவே ஆரோக்கியத்திற்கு வழிகாட்டும் ஒரு பொதுவான பரிந்துரையாக இருந்து வந்தாலும், தற்போது ஜப்பானில் இருந்து வந்த ஒரு புதிய நடைபயிற்சி முறை உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த நடைபயிற்சிக்கு “இடைவெளி நடைபயிற்சி” (Interval Walking) என்றே பெயர். நிபுணர்கள் இதனை பாரம்பரிய நடைபயிற்சியைவிட மேம்பட்டதாக கருதுகின்றனர். இந்த நடைமுறை […]
Walking 2025

You May Like