பிக்பாஸ் 7-வது சீசன் ஆரம்பமாகி ஒரு சில நாட்களிலேயே சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. அந்தவகையில், இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோவில் விஷ்ணுவிற்கும், பிரதீப் ஆண்டனிக்கும் இடையில் வாக்குவாதம் நடக்கிறது. இதையடுத்து, தற்போது இரண்டாவது ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
அதில் பிக்பாஸ் “இந்த பிக்பாஸ் வீட்டில் முதன்முறையாக இரண்டு பேருக்கு அரெஸ்ட் வாரண்டுகள் பிறப்பிக்கப்படவுள்ளன” எனக் கூறுகிறார். மேலும், “மக்களை எண்டர்டெய்ன்மென்ட் பண்ணுறதுதான் உங்களுடைய முதல் வேலையாக இருக்குமென்று உங்க எல்லாருக்கும் சொல்லப்பட்டது.
அந்த அடிப்படையில் போன வாரம் அனைவரையும் கவனித்ததில் அரெஸ்ட் வாரண்ட் உறுதி செய்யப்பட்டவர்கள் அக்ஷய மற்றும் வினுஷா இவர்கள் இருவரும் ஜெயிலில் அடைக்கப்படுவார்கள்” என பிக்பாஸ் கூறுகிறார். இதையடுத்து, அக்ஷயா தனியாக சென்று கண்ணீர் விட்டு அழுகிறார்.
இதற்கிடையே இந்த வாரம் எவிக்ஷன் செய்யப்பட்டவர்கள் அக்ஷயா, ஜோவிகா விஜயகுமார், மாயா, பூர்ணிமா ரவி, பிரதீப் ஆண்டனி, விசித்ரா, விஷ்ணு விஜய் ஆகியோர் தான்.